இஸ்லாமியரிடம் பதில் கிடைக்காத கேள்விகள்.
இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை. இந்த கேள்விகள் அவர்களுடைய இறைத்தூதர்களை குறித்தோ, வேடிக்கையான நம்பிக்கைகளையும், கதைகளையும் குறித்தோ அல்ல, மாறாக அம்மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை குறித்தது. அவர்களின் அஸ்திவாரத்தை குறித்தது.
1) இறைவனுக்கு உருவம் உள்ளதா /இல்லையா ? இறைவனின் தன்மைகளை நம்மால் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ள முடியுமா ?
2) கற்சிலைகளை வனங்காத நீங்கள் காபாவை எதற்காக போற்றுகிறீர்கள் ? எதற்காக இந்திய முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுகிறீர்கள் ? அல்லாவை ஒரு சிலையோடு இனை வைக்க முடியாது என்று நம்பும் நீங்கள், ஒரு திசையில் மட்டும் அல்லாவை வைக்கலாமா ?
3) மெக்காவில் உள்ள அந்த மசூதி ஒரு கட்டிடம் அவ்வளவே ? அதை எதற்கு வீடு தோறும் மாட்டி வைத்துள்ளீர்கள். அந்த செங்கலும் மணலும் ஆன கட்டிடத்தை உங்கள் வீட்டில் மாட்டிவைத்து ஏன் இறைவனை கேவலப்படுத்துகிறீர்கள் ?
4) அரபி மொழியில் எதற்காக இறைஞ்சுகிறீர்கள் ? இறைவனுக்கு அரபி மொழிதான் தெரியுமா ? மற்ற மொழிகளில் இறைஞ்சினால் அவனுக்கு புரியாதா ? அருவமாய் இருக்கும் இறைவனுக்கு காது மட்டும் கேட்குமா ?
5) ஐந்து கடமைகளை செய்பவன் தான் முஸ்லீம். அதை செய்பவன் தான் சுவர்கத்துக்கு செல்ல முடியும். ஆக எத்தனை தீயவனாக இருந்தாலும் ஒருவன், ஐந்து கடமைகளை செய்துவிட்டு சுவர்கம் செல்ல முடியும். ஆனால் ஒருவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும் இந்த ஐந்து கடமைகளை செய்யாமல் சுவர்கம் செல்ல முடியாதா ?
6) இஸ்லாமில் எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும், மிகப்பெரும் பிரிவுகளாக ஷியா முஸ்லீம்களும், சுன்னி முஸ்லீம்களும் உள்ளனர். இவர்கள் இருவருமே தங்கள் பிரிவினர்தான் சுவர்கத்தை அடைவார்கள் என்று சொல்லுகிறார்கள். இதில் எது உண்மை ?
7) இந்த பூமியில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் 450 கோடி மக்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் நரகத் தீயில் வெந்து போவார்களா ?
8 ) இறைவனின் படைப்பில் ஏன் பாரபட்சம். நீங்களோ முன் ஜென்மத்தையும், முன்வினையையும், நம்புவதில்லை. அப்படி இருக்கையில் பிறக்கும் போது ஏன் குழந்தைகள் வெவ்வேறு விதமாக பிறக்கின்றன ? ஒரு குழந்தை ஆரோக்கியமாய், ஒரு குழந்தை முடமாய், குருடாய், செவிடாய் பிறப்பது ஏன் ? ஒரு குழந்தை செல்வந்தனாய், மற்றது பரம ஏழையாய் , ஒரு குழந்தை அறிவாலியாய், மற்றது மனநோயுடன் பிறப்பது ஏன் ? இறைவன் பாரபட்சம் பார்ப்பவனா ? அப்படி எல்லோருக்கும் சமமாக இல்லாமல் பாரபட்சம் பார்ப்பவன் இறைவனா இல்லை இராட்சஸனா ?
இன்னும் நிறைய கேள்விகள் வரிசையில் இருக்கின்றன ? முதலில் இந்த கேள்விகளுக்கே பதில் தர முடியாது, பிறகு எதற்கு இன்னும் கேள்விகள்.
நீங்கள் அஷ்ரஃபா ? அஜ்லஃபா ? அர்ஜல்ஸா ? வாருங்கள் நண்பர்களே ஜாதியில்லாத இஸ்லாமின் தோலை உரித்து பார்த்து விடலாம்.
இந்த பிரிவுகளை தவிர இச்னாஷரி, இஸ்மாயில் மற்றும் அஹமதி ஆகிய உட்பிரிவுகளும் பல உள்ளன. இதை தவிர இடம் சார்ந்த சிந்தி, பலூசி, பஞ்சாபி என பல பிரிவுகளும் உள்ளன. ஆனால் ஜாதி இல்லை என்று சொல்கிறார்களே ? உண்மையா ?
யார் சொன்னது இஸ்லாமில் ஜாதியில்லை என்று ? அகில இந்திய இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோரின் நிறுவனர், "முஹம்மத் ஷபீர் அன்சாரி" பொங்கி எழுகிறார். மேல் ஜாதி "அஷ்ரஃப்" சமூகத்தின் பாரபட்சத்தையும், அடக்கு முறையையும் எதிர்த்து போராடும் "அஜ்லப்" சமுகத்தை சேர்ந்தவர் இவர்.
மேல் ஜாதி, கீழ் ஜாதி என்றெல்லாம் எதுவும் எங்கள் இஸ்லாத்தில் இல்லை. எங்கள் குரான் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை என்று சில அரேபிய அடிமைகள் மதம் மாற்றுவதற்காக சொல்ல வருவார்கள். உங்கள் குரானில் இருந்தால் எங்களுக்கு என்ன, இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன ? நடைமுறையில் என்ன நடக்கிறது ? அதுதானே முக்கியம்.
அனைவரையும் அன்பு செய் என்கிறார் ஏசுபிரான். இங்குள்ள கிறிஸ்துவர்கள் செய்கிறார்களா ? பெரும்பாலும் எரியும் வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபம் என்றுதானே இருக்கிறார்கள் ? ஆக நாம் தியரி அல்லது கருத்து ரீதியாக எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாம், நடைமுறையில் என்ன நடக்கிறது ? அதுதான் பில்லியன் டாலர் கேள்வி.
கீழ் ஜாதியை சேர்ந்த முஹம்மத் அன்சாரி தான் இஸ்லாமில் பிரிவினைகள் உள்ளது என்று சொன்னதற்கு தன்னை "ஜமாத் இ இஸ்லாமி" என்கிற இயக்கம் பத்து வருடம் முன்பு எப்படி எல்லாம் மிரட்டியது, தாக்கியது என்று நினைவு படுத்துகிறார். அவர் சொல்கிறார் நன்றாக படித்த இஸ்லாமியர்கள்தான் ஜாதியை இன்னும் அதிகமாக பின்பற்றுகிறார்கள். ஹைத்ராபாத்தை சேர்ந்த ஒரு "சையத்" ஜாதியை சேர்ந்த ஒரு குடும்பம் என் இரண்டாவது மகளுக்கு தன் மகனை திருமணம் செய்ய இருந்ததை நாங்கள் "ஜுலாஹா" என்ற சமூகம் என்று தெரிந்ததும் நிறுத்தி விட்டதை நினைவு கூற்கிறார்.
முஹம்மத் பின் துக்ளக் காலத்தை சேர்ந்த "பரானி" என்பவர் எழுதிய "ஃபடவா இ ஜஹ்ந்தாரி" எனும் நூலில், இஸ்லாமில் உள்ள பிரிவுகள், உட்பிரிவுகள் ஆகியவற்றை பற்றி பல சட்ட திட்டங்களை எழுதி இருக்கிறார். துருக்கிய நாட்டை சேர்ந்தவர்கள் உயர்ந்த பிரிவினர் என்றும் அவர்கள்தான் உயர்ந்த பதவிகளை வகிக்க வேண்டும் என்றும், இந்திய இஸ்லாமியர்கள் தாழ்ந்த ஜாதி என்றும் கீழ்தரமான வேலைகளை செய்யவேண்டும் என்றும் வரையறை செய்துள்ளார்.
இந்த நூலை படிப்பவர்கள், எப்படியெல்லாம் இஸ்லாமுக்கு மாற்றப்பட்ட இந்திய முஸ்லீம்கள் அவதிப் பட்டார்கள் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
லக்னௌவை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் "மசூத் அலம் ஃபலாஹி" தன்னுடைய "ஹிந்துஸ்தான் மேன் ஜாட்-பாட் ஔர் முசல்மான்" (இந்திய முஸ்லீம்களில் ஜாதியம்) என்கிற புத்தகத்தில் இதை விளக்குகிறார். ஜாதியம் என்பது இஸ்லாத்தில் பல நூற்றாண்டுகளாகவே உள்ளது என்கிறார். பதிமூன்றாம் நூற்றாண்டில் "குதுப்புத்ஹ்டீன் ஐபக்" தில்லி சுல்தானாக இருந்த காலத்திலேயே இஸ்லாமில் ஜாதியம் இருக்கிறது என்கிறார் அவர்.
"அஷ்ரஃப்" எனும் உயர்ந்த ஜாதி முஸ்லீம்களுக்கு இடையே பல பிரிவுகள் உள்ளன. சையத், குரோஷி, துர்க், ஷெயிக், மலீக், முகல், பத்தான் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்க ஜாதிகள்.
"அஜ்லஃப்" எனும் தாழ்ந்த ஜாதியில் அன்சாரி, கசாய் (கசாப்பு கடை பாய்கள்), நாய் (முடி வெட்டுபவர்கள்), ஜுலாஹா (தறி நெய்பவர்கள்) மற்றும் குஞ்ஜ்ரா, தோபி, ஹலால்கோர் ஆகியவை உட்பிரிவாகும்.
இதைவிட மிகவும் தாழ்ந்தவர்களாக "அர்ஜல்ஸ்" எனப்படும் குப்பை பெருக்குபவர்கள் மற்றும் செருப்பு தைப்பவர்களும் வேறு இருக்கிறார்கள். அர்ஜல் என்றால் அரபியில் கேவலமான மற்றும் ஒதுக்கப்பட்ட என்று பொருள் தரும். அர்ஜல் பிரிவு "பனார், ஹலக்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பேகி, மௌக்தா, மெஹ்தர் ஆகிய ஜாதிகளை கொண்ட மிகவும் ஒடுக்கப்பட்டவர்களை கொண்டது. 1901ல் எடுக்கப்பட்ட சென்ஸஸ் பட்டியலில் அர்ஜல்ஸ் இனத்தை எந்த முஹமதியனும் சேர விரும்பாத ஒதுக்கப்பட்ட பிரிவு என்றும், மசூதிகளில் கூட நுழைய முடியாத பிரிவு என்றும், மற்ற இஸ்லாமியர் மயானத்தில் அனுமதி இல்லாத பிரிவு என்றும் விளக்கம் உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், "அஜ்லஃப்கள் தங்களை "சையத்" இனத்தினர் திருமணம் செய்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்கிறார்களே, இவர்களே தங்களை விட தாழ்ந்த இனத்தவரை திருமனம் செய்துக் கொள்வதில்லையே ஏன்" என்று சையத்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதை தவிர லெப்பை, ராவுத்தர், சாய்பு, மரக்காயர் என்று ஏகப்பட்ட பிரிவுகள், ஏகப்பட்ட உட்பூசல்கள். ஒருவர் கொள்கை மற்றவர்களுக்கு ஆகாது. ஒவ்வொருவரும் எனது மட்டுமே உண்மையான இஸ்லாம், எனது மட்டுமே உயர்ந்த ஜாதி என்கிற சண்டை. இதில் இறைவனை மட்டுமே வனங்க வேண்டும் எனும் ஒரு சித்தாந்தம் ஒரு புறம், சுஃபிகளின் குருமார்கள் ஒருபுறம், சந்தனக்கூடு திருவிழா போன்ற பல பாரம்பரிய நிகழ்ச்சிகளை ஏற்காத வஹாபிஸம் ஒரு புறம் என்று அடிக்துக் கொள்கிறார்கள் ஒருவருக்கு ஒருவர். தனித்தனியாய் ஒவ்வொருவருக்கும் பலவிதமான மசூதிகள், ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரின் மசூதிக்கு செல்ல மாட்டர்கள். என்ன கொடுமையப்பா இது ?
அடுத்து தன் பாலைவன அரபு மொழியில் மட்டுமே பாங்கு ஓத வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டதாக ஒரு மொழி வெறி வேறு. தங்கள் புனித நூல்கள் அரபியில் இருப்பதால், அரபி மொழி இருப்பதிலேயே சிறந்த மொழி எனும் இறுமாப்பு கொண்ட மொழி வெறி வேறு.
இஸ்லாமில் ஜாதி வெறி மட்டும் அல்ல, இனவெறியும் உள்ளது, நிறவெறியும் உள்ளது. சௌதிகள் கருப்பின முஸ்லீம்களை கேவலமாகதான் வைத்துள்ளார்கள். தங்கள் பாலைவன நாகரீகமே பெரிது எனும் ப்ராந்திய வெறியும் உள்ளது. பாகிஸ்தானில் இந்திய முஸ்லீமகளை பஷ்டூன்கள் கேவலமாக வைத்துள்ளனர். தமிழகத்திலேயே பல ப்ராந்திய பிரிவுகளும் உள்ளன. கந்தூரி விழா நடத்துபவர்களை, தங்களை அரபிகளின் தலைமை அடிமை என்று நினைத்துக் கொண்டு பலர் கண்டிப்பதும், தகராறு செய்வதும் வழக்கம்.
ஆக மொத்தம், ஜாதிய வெறி, இன வெறி, நிற வெறி, மொழி வெறி, ப்ராந்திய வெறி, என அத்தனை வெறியும் உள்ள ஒரே மார்கம் அமைதி மார்கம்
எப்படியோ போகட்டும் இனிய மார்கத்தில் இனிமேல் யாராவது மாற நினைத்தால் நீங்கள் எந்த இனத்தில், எந்த பிரிவில், எந்த உட்பிரிவில், எந்த மசூதியில், எந்த கொள்கையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சேருங்கள். சரியா ?
வாருங்கள் நண்பர்களே நாம் வெளி வேஷம் போடாமல், வாய்சொல் வீரம் பேசாமல், சமத்துவ முகமுடி போடாமல், ஜாதி பாகுபாடுகளை மேலும் கலைந்து உண்மையான, ஒற்றுமையான ஹிந்து சமுதாயத்தை உருவாக்குவோம். இதை மற்றவருக்கும் பகிர்வோம்
8 comments:
இந்த இந்து சந்நியாசி, இதுவரை இஸ்லாத்தைப் பற்றி அறியவில்லை. மாறாக, குர்ஆன் தவிர்ந்த வேறு குழறுபடியான விடயங்களை நிறையப் படித்தும், பார்த்துமுள்ளார் என்பது அவரது கேள்விகள் மூலம் தெரிய வருகின்றது.
அல்லாஹ்வை பற்றிய கேள்வி எழுப்பும் ஒருவர், தான் இறைவனை அறிந்தவராக இருக்க வேண்டும். அதை அவர் வெளிப்படுத்த வேண்டும்! இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா? போன்ற சிறுபிள்ளைத் தனமான கேள்விகளைக் கேட்பவர் இறை தன்மைகளை அறிவால் அறிய முடியுமா என்ற கேள்வியையும் முன்வைக்கிறார். இவை குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்ட விடயங்கள்.
அரூபமான இறைவனுக்குக் காது மட்டும் கேட்குமா! என்ற கேள்வி மூலம் அவர் எதனையும் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவு. ஏன் அரபு மொழியில் முஸ்லிம்கள் தமது மதக் காரியங்களை நடத்துகின்றது என்ற கேட்பதைவிட மோசமான, அரபியைப் பாவிப்பதை மதவெறி எனக் கூறுவது. அவரது இந்து வேதங்களும், பூஜை வழிபாடுகளும் சமஸ்கிருதத்தில் நடைபெறுவது மொழி வெறியா!
இவர் தனது வேதத்தை அறிந்திருந்தால், மறுபிறப்பு பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கமாட்டார். காரணம், இந்து வேதங்களான அதர்வன, யசூர், சாம, இருக்கு போன்றவற்றில் கூட மறுபிறப்பு பற்றிய எதுவும் கிடையாது. சமயப் பெரியார்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மகான்கள் மறுபிறப்பை மிக மோசமாகச் சாடியிருக்கின்றார்கள்.
திசை பற்றிக் கேள்வி எழுப்பும் ஒருவர், திசை மட்டும் இல்லாதிருந்தால் மனித வாழ்க்கையே கேள்விக்குறி ஆகியிருக்கும் என்பதை எங்கே அறியப் போகின்றார்? உலகில் உள்ள மக்கள் அனைவரும் கஃபாவை நோக்குவதன் மூலம் வெவ்வேறு திசைகளைப் பார்க்கின்றனர் என்ற உண்மையை அறிந்திருந்தால், அல்லாஹ்வை ஒரு திசையில் ஏன் வைக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி இரார். பாவம், இதிலிருந்து இவரது அறியாமை ஊர்ஜிதமாகின்றது.
இறை இல்லம் பற்றி இந்து வேதங்கள் கூறியவற்றையாவது பார்த்திருந்தால் கஃபா பற்றிய உண்மைகளை அவர்களின் வேதங்களில் இருந்து கண்டிருப்பார்.
நல்ல காலம் வீடுகளில் திரைச் சீலை ஏன் போடுகின்றீர்கள்? காட்சிகளை ஏன் வைக்கின்றீர்கள்? ஏன் அழகுபடுத்துகின்றீர்கள் ? போன்ற கேள்விகளைக் கேட்காதிருப்பது! தனிமனித உணர்வுகளை, ஆசைகளை, நடத்தைகளை இஸ்லாமாக நினைத்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருந்து இவர் மாற வேண்டும். இவர் முதலில் தனது வேதத்தையாவது அறிந்து கொள்ளுதல், அவரைக் காட்டுமிராண்டி வாழ்க்கையில் இருந்து விடுவிக்கும்.
இந்து சமயக் கடவுளரே எம்மதமும் எமக்குச் சம்மதம் என்ற கருத்தைக் கொண்டிருப்பதை இவர் அறியாதவராக இருந்து கொண்டு எப்படி இவர் கேள்வி கேட்கும் தகுதியைப் பெறுகின்றார்?
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுக .. அடுத்தவங்கள அப்புறம் குறை சொல்லலாம் ... நற்றுணையாவது நமச்சிவாயமே
4 kealvikku pathil
திருக்குர்ஆன் அரபி மொழியில்
இருப்பது ஏன்?
பதில்:
மனிதர்களிலிலிருந்து தூதர்களைத்
தேர்வு செய்து அவர்கள்
மூலமே இறைவன்
வேதங்களை வழங்கியுள்ளான்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர்
ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர்.
அத்தூதர்களின்
தாய்மொழி எதுவோ அம்மொழியில்
அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.
எந்த ஒரு தூதரையும் அவர்
தமது சமுதாயத்திற்கு விளக்கிக்
கூறுவதற்காக அச்சமுதாயத்தின்
மொழியிலேயே அனுப்பினோம். தான்
நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில்
விட்டு விடுகிறான். தான்
நாடியோருக்கு நேர்
வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்;
ஞானமிக்கவன். (குர்ஆன் 14:4)
ஈஸா என்னும் இயேசு நாதரும்
இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்
என்று குர்ஆன் கூறுகிறது.
அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம்
வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது.
அந்த வேதம் அரபு மொழியில்
அருளப்படவில்லை. இயேசுவின்
தாய்மொழியில் தான் அருளப்பட்டது.
அந்த அடிப்படையில் தான் நபிகள்
நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம்
அருளப்பட்டது. நபிகள்
நாயகத்துக்கு அரபு மொழி தான்
தெரியும். அவர்களுக்குத் தெரிந்த
மொழியில் வேதம் அருளப்பட்டால் தான்
அவர்களால் அதற்கு விளக்கம் கூற
முடியும்
அரபு மொழி தான்
தேவமொழி என்பதோ அது தான்
உலகிலேயே உயர்ந்த
மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல.
எல்லா மொழிகளும்
சமமானவை என்றே இஸ்லாம்
கூறுகிறது. மொழியின்
அடிப்படையில் எவரும்
உயர்வு தாழ்வு கற்பிக்கக்
கூடாது என்பதும் இஸ்லாத்தின்
கொள்கை.
இஸ்லாம்
அரபு மக்களுக்கு மட்டுமின்றி
உலகில் உள்ள
அனைத்து மொழி பேசுவோருக்காகவும்
அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்.
பல்வேறு மொழி பேசும்
மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும்
ஒரு வழிகாட்டி நெறியையும்
கொடுத்து அனுப்பும்
போது ஏதாவது ஒரு மொழியில் தான்
கொடுத்தனுப்ப முடியும்.
எந்த
மொழியில் அந்த
வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற
மொழியைப் பேசுவோர்
இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்
.
யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப
முடியாதவாறு ஒரு மொழியைத்
தேர்வு செய்ய முடியாது.
அரபு மொழிக்குப் பதிலாக தமிழ்
மொழியில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால்
இதே கேள்வியை மற்ற மொழி பேசும்
மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
எனவே உலக ஒருமைப்பாட்டைக்
கருத்தில் கொண்டு செய்யப்படும்
காரியங்களில்
மொழி உணர்வுக்கு முக்கியத்துவம்
கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச்
சிதைத்து விடக் கூடாது.
நாம் வாழுகின்ற இந்திய நாட்டில்
பல்வேறு மொழி பேசும் மக்கள்
வாழ்கின்றனர். ஆனால்
நமது நாட்டிற்கு ஒரு தேசிய
கீதத்தை வங்காள மொழியில்
உருவாக்கி அதை அனைத்து
மொழியினரும் ஏற்றுக்
கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக்
கொண்டிருப்பதால்
இந்தியாவிலேயே முதன்மையான
மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற
மொழிகள் தரம்
குறைந்தவை என்றோ ஆகாது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக
மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து
விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக்
கொள்ளும் போது உலக
ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள்
அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித்
திரும்ப வேண்டும் என்பதற்காகவும்
மிகச் சில விஷயங்களில்
மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால்
மனித குலத்துக்கு எந்தக் கேடும்
ஏற்படாது. மாறாக உலகளாவிய
ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான்
ஏற்படும்.
ஏதாவது ஒரு மொழியில் தான்
உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப
முடியும் என்ற அடிப்படையில் தான்
நபிகள் நாயகத்திற்கு தெரிந்த
அவர்களுடைய தாய் மொழியான
அரபு மொழியில் குர்ஆன்
அருளப்பட்டது.
உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த
மொழி என்பதற்காக அரபு மொழியில்
குர்ஆன் அருளப்படவில்லை.
அரபு மொழி பேசுபவன்
வேறு மொழி பேசும் மக்களை விட
சிறந்தவன் அல்லன் என்று நபிகள்
நாயகம் (ஸல்) பிரகடனம்
செய்ததே இதற்குப் போதிய
சான்றாகும். (நூல்: அஹ்மத் 22391)
#Tamil_IRF
Ungal 6 kealvikku inka pathil ullathu insha allah click pannavum
https://m.facebook.com/story.php?story_fbid=489638704481759&id=512657448826391
Ungal 7 kealvikku insha allah click seiyavum
https://m.facebook.com/story.php?story_fbid=626905774068224&id=512657448826391
Ungal 8 kealvikku pathil
https://m.facebook.com/story.php?story_fbid=843383769087089&id=512657448826391
Sry ling seriyaga vara villai
Ling' gai copy seidhu paste seithu parthavim
Post a Comment