பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ?

ஒரு மதத்தை தினிப்பதால் எப்படி ஆளுமை உண்டாகும் ?

மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல ? அது ஒருவர் தன் மண்ணின் மீதும், தன் வேர்கள் மீதும் கொண்ட பற்று. ஒருவரை ஆப்ரகாமிய மதங்கள் பற்றுகையில் அவர்கள் தங்கள் வழிபாட்டு முறையை மட்டும் மாற்றிக் கொள்வதில்லை, தங்கள் வேர்களை விட்டு விலகுகிறார்கள். தங்கள் மூதாதையர்களை முட்டாள்கள் என நினைக்கிறார்கள். தங்கள் மண்ணையே இரண்டாம் பட்சமாக நினைக்கத் தொடங்குகிறார்கள். அவர்களின் புனித நகரங்கள் திடீரென எங்கோ எல்லைதாண்டி இடம்பெயர்கின்றன. எங்கோ இருக்கும் பழக்க வழக்கங்களை உள்வாங்குகிறார்கள். சுருக்கமாய் சொன்னால், உங்கள் மூளையில் உள்ள பதிவுகளை அழித்துவிட்டு புதிய பதிவுகளை இடுவதற்கு அது சமமாகிறது.

வெள்ளைக்காரன் இந்தியாவை ஆட்சி செய்தாலும், மக்கள் அதை கண்டு


கொள்ளவே இல்லை. வெளையனால் இந்தியர்களின் நிலத்தை பிடிக்க முடிந்ததே தவிர அவர்களின் மனதை பிடிக்க முடியவில்லை. இது பிரிட்டீஷ் பாராளுமன்றத்திலும் எதிரொளித்தது. கலாச்சார ரீதியாக நாம் என்று இந்தியாவை ஆளுமை செலுத்த தொடங்குகிறோமோ, அன்றுதான் இந்தியாவை ஆள்கிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று பலர் உரக்க சொன்னார்கள். அதை எப்படி செய்யலாம் என்று ஆராயப்பட்டது.

ஐரோப்பியர்கள் ஒரு நாட்டை காலணியாக்கி கொள்வதற்கு இரண்டு படிகளில் செய்வார்கள். முதல் படி, ஆயுதங்களை கொண்டும், அங்குள்ள அரசர்களையோ, குழுக்களையோ ஒருவொருக்கு ஒருவர் மோத வைத்து, ஒருவருக்கு ஆயுதம் வழங்கி மற்றவரை ஒழித்து, பின்னர் உதவிய முதலாமவ‌ரையும் ஒழித்து காலணியை பெருக்குவார்கள். மக்களில் தங்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு வசதிகளை செய்துக் கொடுப்பார்கள். ஏற்காதவர்களை வறுமையில் திண்டாட வைப்பார்கள்.

இரண்டாவது கட்டத்தில் ஐரோப்பியாவிலிருந்து "மிஷநரி" குழுக்கள் பிடிப்பட்ட நாட்டை நோக்கி செல்ல தொடங்கும்.
கிறிஸ்துவ பிரச்சாரத்தை பெரும் பொருட்செல்வோடு செய்யத் தொடங்கும். ஏற்கனவே வறுமையின் பிடியால் செய்வது அறியாது துடிக்கும் மக்களை இவர்கள் அனுகுவார்கள். "யேசுவை வணங்கத் தொடங்கினால் உங்கள் வறுமை விலகும்" என்று சொல்லி அவர்களுக்கு உதவி புரிய தொடங்குவார்கள். எதை தின்னால் பித்தம் தெளியும் என்று இருக்கும் மக்களுக்கு வேறு வழி இல்லையே ? தங்களின் ஆயிரக்கணக்கான வருட வேர்களை அழித்துக் கொண்டு, கிறிஸ்துவத்துக்கு மாறுவார்கள். இப்படித்தான் தென் அமேரிக்க நாடுகள், தெற்கு ஆப்ரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ், கிழக்கு ஐரோப்பியா, மற்றும் பல சின்னச்சிறிய நாடுகள் மற்றும் தீவுகளில் இவர்கள் முழு ஆளுமையை உண்டாக்கினர்.

இந்தியாவோ மிகப்பெரும் நாகரீகங்களையும், தொண்மையும் தன் வசம் வைத்திருந்தது. ஆனால் எழுநூறு வருட இஸ்லாமிய படையெடுப்பாலும், ஆட்சியாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு ஊரும், தங்கள் மக்களை பாதுகாத்து கொள்ள சிறு குழுக்களாக இயற்கையாக அமைந்தனர். அந்நியர் வசம் தம் மக்களை இழக்க விரும்பாத ஒவ்வொரு குழுவும் ஒரு "நெட்வர்க்கை" போல செயல்பட்டது. ஆட்சி அந்நியர் வசம் இருப்பதாலும், தொடர்பு கொள்ளும் வசதி இன்று போல் இல்லாததாலும் ஒவ்வொரு குழுக்களும் மேலும் உள்முகமாக திருப்பியது. அந்நியனின் ஆக்கிரமிப்பு தங்களை பாதிக்காதவாறு தங்கள் வேர்களை காத்துக்கொள்ள இந்த ஜாதிக் குழுக்கள் மிகவும் பயன்பட்டன. இந்த ஜாதிக்குழுக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்றைய ஹிந்து தர்மமே கேள்வி குறியாக இருந்திருக்கலாம். ஆக இந்த சிறு சிறு ஜாதிக் குழுக்கள் ஹிந்து அல்லது சனாதன தர்மம் என்று சொல்லப்படுகிற ஆலமரத்தின் விழுதுகளாக செயல்பட்டன.

இந்த ஆலமரத்தினை எப்படி சாய்ப்பது என்று யோசித்தார்கள் வெள்ளையர்கள்.

எப்படி அரசர்களை பிரித்து சிறிய படையை கொண்டு நாட்டை பிடித்தார்களோ அதைப் போல மக்களை பிரிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விரோதம் கொள்ள செய்ய வேண்டும். ஹிந்துக்களை உடைக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவில் முதிலீடு செய்துவிட்ட இவாண்ஜலிஸ்டுகள் (யேசுவை விற்று பிழைப்பு நடத்துவர்கள்) கடுமையாய் யோசிக்க தொடங்கினர்.

அவர்கள் கண்களுக்கு இந்தியரில் உள்ள நிற வேற்றுமை புலப்பட்டது. சீதோஷ்ண மற்றும் பழக்க வழக்கங்களால் இந்தியர்கள் பல நிறங்களில் இருந்தார்கள். சிலர் வெள்ளையாய் இருப்பதும், சிலர் மாநிறமாய் இருப்பது, சிலர் கறுப்பாக இருப்பதும் தெரிந்தது. வெள்ளையர்களை அந்நியன் என்று இந்தியர்கள் நிராகரிப்பதால், அவர்கள் மதத்தையும் அந்நிய மதம் என்று நிராகரித்தார்கள். தங்கள் வேர்களை விட்டு அசையாமல் இருந்த இந்தியரை, தங்கள் வேர்களையே அந்நியமாக சித்தரித்தால் என்ன என்று யோசித்தார்கள்.

அந்த மிகப்பெரும் சூழ்ச்சியினாலும், நயவஞ்சகத்தாலும் பிறந்ததுதான் "ஆரிய படையெடுப்பு" சித்தாந்தம்.

ஆங்கிலத்தில் "வல்லவனே நல்லவன்" என்று ஒரு பழமொழியுண்டு. அது சரித்திரத்தை பொறுத்தவரை உண்மை. எவன் வல்லவனோ அவனே சரித்திரத்தை தீர்மானிக்கின்றான். அதாவது சரித்திரத்தை தன்னை ஆராதிக்கும் வகையில் மாற்றி எழுதுகிறான். மனித வாழ்வில் இப்படித்தான் பல சரித்திரங்கள் புரட்டி போடப் போடுகின்றன. பொருள் சார்ந்த இன்றைய உலகில் சரித்திரத்தை படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் குறைகின்றனர். எந்த நாடு தன் சரித்திரத்தை காக்கிறதோ, எந்த நாட்டு மக்கள் சரித்திரத்தை மறக்காமல் அதன் பாடங்களை மனதில் பதிந்துக் கொள்கிறார்களோ. அவர்களுக்கு அழிவே இல்லை. அத்தகைய மக்கள் சாம்பலில் இருந்து உயிர்தெழும் பிணிக்ஸ் பறவைகளாய் மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுவார்கள். யூதர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். தங்கள் சரித்திரத்தை மறந்து தரம் குறைந்து திரிபவர்கள் முன்னேறுவது கடிணம். இந்தியர்கள் அதற்கு நல்ல உதாரணம். அதனால்தான் இத்தனை வளங்கள் இருந்தும் இந்த நாடு தன்னுடைய சக்திக்கு ஏற்ப இன்னும் வளர்ச்சி பெறவில்லை.

சரி, இந்த ஆரிய படையெடுப்பு எனும் விஷத்தை, வெள்ளையர்கள் உருவாக்கியதை விவரிக்கும் முன் ரோமானியர்களின் காட்டு தனக்களை தங்கள் குருதியில் கொண்ட ஐரோப்பியர்களை குறித்து எழுதியாக வேண்டும்.

ரோமானிய பேரரசு உடைந்து, சிதைந்து போனாலும் அதன் அடிப்படை பழக்கங்களான அப்பாவிகளை அடிமையாக்குவதும், அடிமைகளை விவரிக்க முடியாத சித்ரவதைக்கு உள்ளாக்குவதும், அவர்களை ஒரு பொருளாய் பாவிப்பதும், போர் செய்து ஒரு தேசத்தை கைப்பற்றாமல் நயவஞ்சக முறையிலும், கீழ்தரமான மதத் தினிப்புகளாலும் அதை செய்வதையும் அடிப்படையாக கொண்டிருந்தார்கள். இதற்கு ஒரு அருமையான உதாரணம் "கிறிஸ்டபர் கொலம்பஸ்" எனும் நயவஞ்சக கொலைப்பாதக அயோக்கியன். ஆம் இன்று வரலாற்றில் நாம் அமேரிக்காவை கண்டுப் பிடித்தவன் என்று ஆராதிக்கிறோமே அவன் தான்.

இந்த கொலம்பஸ் என்கிற கேடுகெட்டவன், ஸ்பானிய ராணி "இஸபெல்லா" என்பவள் தந்த நிதியைக் கொண்டு இந்தியாவை தேடி பயனித்து வழி தெரியாமல் கரிபீய தீவுகளை அடைகிறான். (ஏதோ அந்த வகையில் பாரதம் தப்பித்தது) அவன் சென்று அடைந்ததோ சூது வாது தெரியாத அப்பாவி மக்கள் வாழும் ஒரு இடம். (இதே கொலைம்பஸ் மிகப்பெரும் வீரர்களான மாயர்கள் அல்லது ஐரொகோயிஸ்கள் வாழும் இடங்களில் முதல் முதலாய் கால் வைத்திருந்தால் கதையே வேறு) இந்த கொலைம்பஸ் அந்த தீவுக்குள் மிக ஜாக்கிரதையாய் செல்கையில் அங்கு உள்ள மக்கள் ஓடி வந்து அவனை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அவனை வரவேற்கிறார்கள். தங்களுடைய சரித்திரமே இந்த கொலை பாதகர்களால் அழிய போகிறது என்று தெரியாமல் அவனுக்கும் அவன் கூட்டத்திற்கும் உதவுகிறார்கள், விருந்தோம்பல் செய்கிறார்கள்.

கொடுங்கோலன் கொலைம்பஸ்ஸோ, தன் நாட்டுக்கு தகவல் அனுப்புகிறான். "புனித ட்ரினிட்டியின் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி) பெயரால் இங்கே நமக்கு நிறைய அடிமைகளும், அருமையான மரங்களும் கிடைத்துள்ளன‌, இங்கு இருப்ப‌வர்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்கள், எளிதாக நாம் இவர்களை பிடித்து விடலாம்" என்று எழுதுகிறான். இதற்கு பின்னர் அத்தீவில் உள்ள 500க்கும் மேற்பட்ட மக்களை பிடித்து மூன்று கப்பல்களில் அவர்களை மிக மிக நெருக்கமாக அடைத்து ஐரோப்பாவின் அடிமை சந்தைக்கு விற்பதற்காக அனுப்புகிறான். துரதிஷ்ட வசமாக அக்கப்பலில் வந்தவர்களில் 300 பேர் உயிரோடு ஐரோப்பாவில் தரை இறக்கப்படுகிறார்கள். அதிர்ஷ்ட வசமாக நெரிசலில் மிஞ்சியவர்கள் இறக்கிறார்கள். இப்படி கொடுங்கோலன் கொலைம்பஸ்ஸால் தொடங்கப்பட்ட இந்த அடிமை வியாபாரம் பல்கி பெருகி, வடக்கு மற்றும் தெற்கு அமேரிக்க கண்டத்தையும் அதன் சுற்றி உள்ள தீவுகளையும் விழுங்கியது. அது விழுங்கி முடித்ததும் கிறிஸ்துவ பிரச்சார குழுக்கள் விழுங்கிய நாட்டை நோக்கி சென்று, யேசுவின் "அனைவரையும் அன்பு செய்" எனும் தத்துவத்தை பரப்ப கிளம்புவார்கள்.

இதை எதற்கு எழுதினேன் என்றால், ஐரோப்பியர்களின் சரித்திரம் தெரிந்தால் தான் அவர்களின் தன்மை நமக்கு புரியும்.
இப்படிப்பட்ட நல்லவர்கள்தான் நம் சரித்திரத்தை எழுதினார்கள் என்றால் அது எப்படி இருக்கும் ? இவர்கள் எதிலுமே திட்டமிட்ட சூழ்ச்சியை மையமாக கொண்டு மக்களை பிரித்து, தாழ்த்தி தங்கள் இனத்தை மட்டுமே வளர்த்தி கொள்வதில் ஈடு இனையற்றவர்கள். ஒற்றுமையாய் வாழும் ஒரு தேசத்தை சுக்கு நூறாக ஆக்குவதில் வல்லவர்கள். இந்த சூழ்ச்சிக்காரர்கள், இந்தியர்களை எப்படி பிரிப்பது என யோசித்து ஒரு கதையை உருவாக்கினார்கள். எங்கோ மத்திய ஆசியாவிலிருந்து சில மக்கள் கிளம்பி வந்து ஹிமாலய மலையின் கைபர் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்து அங்கு வாழ்ந்துக் கொண்டிருந்த திராவிடர்கள் எனும் இனத்தை அழித்து, அவர்களை தெற்கு நோக்கி ஓட வைத்து ஆளுமை செலுத்தியதாக ஒரு கோட்பாடை உருவாக்கினார்கள். முதலாம் பாகத்தில் நான் குறிப்பிட்டிருந்தது போல் ஒரு மனிதனுக்கு வேர்கள் மிக முக்கியம். தன்னுடைய சரித்திரத்தையும், முன்னோர்களையும் மதிக்கும் ஒரு கூட்டத்தையோ, நாட்டையோ யாராலும் வெல்ல முடியாது, அப்படி வென்றாலும் மீண்டும் அவர்கள் எழுந்து வருவார்கள். அதனால்தான் வெள்ளையன் இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி போட்டான்.

இப்படி மாற்றிய சரித்திரத்திற்கு உரமிட வேண்டுமே ? சில ஆய்வுகளையும், பொய் கதைகளையும் அதற்கு ஆதாரமாக தயாரித்தான். நாம் யார் என்று நமக்கே ஒரு போலியான எண்ணத்தை தோற்றுவித்தான். சரி எதுவாயினும் அதை நம் அறிவு கொண்டு உரசி பார்ப்பது அல்லவா உயர்ந்தது ? ஒருவேளை அவன் நல்ல எண்ணத்தோடு நமக்கு உதவி செய்ய எழுதியருந்தால் என்று சில அந்நிய அடிமைகள் கேட்கக் கூடும் அல்லவா ?

"தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், ஆனால் மீண்டும் தர்மம் வெல்லும்" என்பது கீதையின் சத்திய வாக்கு. சுதந்திர இந்தியாவில் இதை குறித்த ஆய்வுகள் நடந்தன. விஞ்ஞானம் மேலும் வளர்ச்சி அடைந்த‌தாலும், நம் அறிஞர்கள், அகழ்வாரய்ச்சி துறையினர், மற்றும் சரித்திர ஆய்வாளர்களின் பெரும் முயற்சியாலும், இந்த ஆரிய சித்தாந்தமே தவிடு பொடியாக்கப் பட்டது. அதைப் பற்றி விரிவாக மூன்றாம் பகுதியில் பார்ப்போம்

இந்தியாவை குறித்து ஆராய்ச்சி செய்த பல வெளிநாட்டு அறிஞர்கள், குறிப்பாக அகஸ்த் வில்ஹம், ஆர்தர் மற்றும் ஹெர்ன் வில்ஹெம் ஆகியோர் அதன் வேத இலக்கியங்களையும், கோட்பாடுகளையும், தத்துவ ஆழத்தையும் கண்டு வியப்போடு பாராட்டினர்.. ஆனால் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்திய துனைக்கண்ட ஆராய்சியாளர்கள் என்ற பெயரிலும் சரித்திர ஆய்வாளர்கள் என்ற பெயரிலும் இந்தியாவுக்கு நுழைந்தது பெரும்பாலும் கிறிஸ்துவ மிஷநரி கும்பல்கள்தான். இவர்களின் முக்கிய பணியே தாங்கள் பிடித்து வைத்திருக்கும் அடிமை நாட்டின் மீது கிறிஸ்துவத்தை திணிப்பது தான்.

நம்முடைய நாகரீகம் மிகப்பழமையானது என்ற உண்மையை விட நம்மை பிரித்தால்தான் தங்கள் ஆளுமையை முழுதாக செலுத்த முடியும் என்கிற அவசியம் ஆங்கிலேயர்களுக்கு பெரிதாய் பட்டது. அதற்கு வழக்கம் போல் கிறிஸ்துவ மிஷநரிகள் தேவைப்பட்டார்கள்.

வெள்ளையர்களை நம்முடைய ஆழ்ந்த தத்துவங்களும், கோட்பாடுகளும் ஆச்சரியப்படுத்தினாலும் அவர்களுக்கு இயற்கையாவே ஒரு மனோபாவம் உண்டு. உலகில் உள்ள சிறந்த இலக்கியங்கள், தத்துவங்கள், மொழிகள் என்று எல்லாமே ஐரோப்பிய வேர்களில் இருந்துதான் தொடங்கி இருக்கும் எனும் ஒரு எண்னம் அல்லது அகங்காரம். சமஸ்கிருத‌த்தின் மிகச்சிறப்பான தொன்மையும், இலக்கிய வளர்ச்சியும், நுட்பமான சொல்லமைப்புகளும் அவர்களுக்கு வியப்பூட்டின. சமஸ்கிருதத்தில் உள்ள பல வேர் சொல்கள், பழமை வாய்ந்த ஐரோப்பிய மொழிகளில் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் தெரிவித்ததால், அவர்கள் சமஸ்கிருதம் என்பதே தங்கள் ஐரொப்பியாவில் இருந்து வந்தது என்கிற ஒரு ஆதாரமற்ற அனுமானத்தில் இறங்கினார்கள்.

ஆக சமஸ்கிருதம், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் எல்லாமே ஒரே மொழியிலிருந்து உண்டானவை என்று அனுமானித்து அதற்கு "ப்ரோட்டோ-இண்டோ-ஐரோப்பிய மொழி" என்று பெயர் வைத்தார்கள். இந்த ப்ரோட்டோ-இண்டோ-ஐரொப்பிய என்கிற கற்பனை மொழி ஒரே இடத்தில் பேசப்பட்டு, பின்னர் பல இடங்களுக்கு சென்று சமஸ்க்ருதம், கிரேக்கம், லத்தீன் என்று வேறுபட்டதாய் ஒரு அனுமானத்தையும் இறக்கி வைத்தனர். இதற்கெல்லாம் சிகரம் போல் அந்த இண்டோ-ஐரோப்பிய கற்பனை மொழி ஒருவேளை மத்திய ஆசியா அல்லது ஐரோப்பியாவிலிருந்து தொடங்கி இருக்க வேண்டும் என்று தங்கள் இனவெறிக்கு தாங்களே சாட்சியாய் இருந்து, அதை பரப்பச் செய்தனர்.

சமஸ்க்ருதம், கிரேக்கத்திற்கும் லத்தீனுக்கும் தாய் மொழி என்கிற உண்மையை ஒத்துக்கொண்டு, அது பாரத மண்ணில்தான் தொன்றியது என்கிற உண்மையை ஒத்துக் கொண்டால், உலகுக்கே ஞான‌ விளக்காய், தத்துவ ஆதாரமாய் இருந்தது பாரதம் என்பது பகிரங்கமாகி விடுமே. தாங்கள் ஆள்கின்ற ஒரு அடிமை நாடு தங்களுக்கு எப்படி ஞான விளக்காய் இருக்கும் ? மேலும் ஐரோப்பிய ஆளுமையை எப்படி பின்னர் நிலை நாட்ட முடியும் ?

அடுத்து இன்றைய பாகிஸ்தானில் உள்ள பகுதியில் இருந்த‌ சிந்து பகுதிகளில் ஒரு பெரும் நாகரீகம் இருப்பது சில ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பார்வைக்கு வந்தது. உலகிலேயே தாங்கள்தான் நாகரீகமானவர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த வெள்ளையர்களை "சிந்து சமவெளி நாகரீகம்" வியக்க வைத்தது. வெள்ளையர்கள் தங்களுடைய ரோமாபுரிதான் உலகிலேயே முதல் முதலில் திட்டமிட்ட நகரங்களையும், கழிவு நீர் வடிகால் திட்டங்களையும் அமல் படுத்தியது என்று நினைத்திருந்தார்கள், ஆனால் ரோம் தோன்றுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே, அவற்றை கொண்டிருந்த சிந்து சமவெளி நாகரீகத்தை பார்த்து அவர்கள் வியப்படைந்தனர். தாங்கள் ஆண்டுக் கொண்டிருக்கும் அடிமைகளுக்கு இப்படிப்பட்ட ஒரு நாகரீக நகரம் எப்படி அந்த காலத்திலேயே அமைந்திருக்க முடியும் என்றும் அவர்களை யோசிக்க வைத்தது.

மேலும் கிறிஸ்துவ மதத்தில் ஊறியிருந்த அவர்களுக்கு தங்கள் மதத்தை விட பழமையான ஒரு கோட்பாடு இருந்தது பிடிக்கவில்லை. தங்கள் ஆப்ரகாமுக்கும், மோஸ்ஸுக்கும் முன்பு ஒரு நாகரீகம் சிறந்ததாய் விளங்கியதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது இப்படி இருக்க, சிந்து சமவெளிகளில் கண்டுப்பிடிக்கப் பட்ட சிதைந்து போன பல கட்டிடங்களையும், வீடுகளையும் வைத்து சில அறிஞர்கள் இது ஒரு வெளிநாட்டு படையெடுப்பாக இருந்திருக்குமோ என்று யோசித்தார்கள். "வீலர்" என்கிற ஒரு இந்திய துனைக்கண்டத்தை ஆராய்பவர், இது தான் அனுமானித்திருந்த அந்நிய படையெடுப்புக்கான‌ ஆதாரம் என்று இதை பிடித்துக் கொண்டார். இதற்கிடையே, சிந்து சமவெளி நாகரீகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சில உடல் குவியல்களை ஆயவாளர்கள் கண்டெடுத்தார்கள். ஒரு சில ஆய்வாளர்கள் இந்த மக்களின் மரணங்கள் எப்படி ஏற்பட்டன என புரியாமல், இது ஒரு படையெடுப்பினால் இருந்திருக்கலாம் என்று நினைத்தனர்.

எதை தின்னால் பித்தம் தெளியும் என்று யோசித்துக் கொண்டிருந்த வெள்ளையர்களுக்கும், கிறிஸ்துவ ஆய்வாளர்களுக்கும் இது "சர்க்கரை பொங்கலாய்" அமைந்தது. மத்திய ஆசியாவில் இருந்து புறப்பட்ட ஒரு நாடோடி கும்பல், இந்து சமவெளியில் இருந்த திராவிடர்களின் நாகரீகத்தை அழித்து விரட்டிவிட்டு, அங்கு தங்கள் ஆட்சியை ஆண்டார்கள் என்கிற கட்டுக்கதையை அவிழ்த்து விட்டார்கள். அடுத்து இந்த ஆக்கிரமிப்பு எப்போது நடந்தது என்று சொல்ல வேண்டுமே ? தொல்விய‌ல் ரீதியாக சிதிலமடைந்த காலம் மிக பழமையாக இருந்த போதும், அதை ஒப்பிடாமல் அவர்கள் சிதிலமடந்த காலத்தை அல்லது அவர்களின் கற்பனை படையெடுப்பை கி.மு.1500 என்று தீர்மானித்தார்கள்.

அது என்ன கி.மு. 1500 ? பரவலாய் பைபிளின் கூற்றுபடி, உலகம் தோன்றியது கி.மு. 4000. நோவா வெள்ளம் (பைபிளின் படி) வந்தது கி.மு. 2500 என்றும் நம்பியதால், ஆரிய படையெடுப்பு கி.மு. 1500 க்கு முன் நடந்திருக்காது என்று அந்த கிறிஸ்துவ ஆய்வாளர்கள் அனுமானித்தார்கள்.

அடுத்து இந்த ஆரிய படையெடுப்பு சித்தாந்தத்தை ரிக் வேதத்தில் இருந்த சில ஸ்லோகங்களையும் வைத்து இன்னும் பலப்படுத்தினார்கள்.

ரிக் வேதத்தில் இருந்து எதை எடுத்து குறிப்பிட்டார்கள் ?

ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்ட, இந்திரனுக்கும் தசயுக்களுக்கும் நடந்த போரை இவர்கள், ஆரியர்களுக்கும், திராவிடகளுக்கும் நடந்த இன‌ச்சண்டை என்று திரித்து விட்டனர். இந்திரன் வெண்ணிற தோல் உடையவன் என்பதாலும், தசயுக்கள் கரிய நிறம் கொண்டவர்கள் என்பதாலும் அதை இவர்களின் மத வியாபாரத்திற்கு உபயோகித்துக் கொண்டனர்.

ஆனால் அதே ரிக் வேதத்தில், இந்தியா என்பது பல இன‌ங்கள் வாழும் நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "நாங்கள் இந்திரனை வணங்குகிறோம், எங்கள் வணக்கத்துக்கு உரிய இந்திரன், தசயுக்களை ஆரியனாக மாற்றட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஆரியன் என்பது பிறப்பை சார்ந்து வரும் ஒரு இனமல்ல என்றும் தெளிவாகிறது.
ஆனால் இந்த வியாபாரிகளுக்கு தங்கள் மதத்தை விற்பதற்கு தேவையான வரிகளும், வார்த்தைகளும் மட்டுமே அவசியமல்லவா ?

ஆரியன் என்கிற வார்தை, புனிதமானவன் மற்றும் தூயமையானவன் என்பதை குறிக்கும். ஆனால், ஆரியன் என்கிற வார்த்தையை முதல் முதலாய் "மேக்ஸ் முள்ளர்" என்பவர் 1853 ஆம் ஆண்டு ஒரு இனத்தை குறிக்கும் வார்த்தையாக இந்த ஆரிய படையெடுப்பை குறித்து எழுதிய கட்டுரையில் உபயோகித்தார். 1888 ஆம் ஆண்டு அறிஞர்களும், சரித்திர ஆய்வாளர்களும் இதை மறுத்தளித்த போது, மாக்ஸ் முள்ளர் தன்னுடைய பெயர் நிலைக்கொலைவதை கண்டு இவ்வாறு சொன்னார். "நான் ஆரியன் எனப்தை ஒரு ரத்தமாகவோ, எலும்பாகவோ, முடியாகவோ அல்லது மண்டை ஓடாகவோ குறிப்பிடவில்லை மாறாக ஆரிய மொழியை பேசுவபர்களையே அவ்வாறு குறிப்பிடுகிறேன். ஆரியன் என்பதை இனமாக, ரத்தமாக, முடியாக, கண்களாக என நினப்பவர்கள் பெரும் பாவம் செய்கிறார்கள்" என்று பல்டி அடித்தார். ["I have declared again and again that if I say Aryas, I mean neither blood nor bones, nor hair, nor skull; I mean simply those who speak an Aryan language...to me an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar. (Max Mueller, Biographies of Words and the Home of the Aryas, 1888, pg 120) ] ஆனால் அவர் உருவாக்கிய அந்த நஞ்சு ஏற்கனவே விதைக்க பட்டுவிட்டது. ஐரோப்பாவில் பலர் ஆரியத்தை ஒரு இனமாக பாவித்தார்கள். ஹிட்லரும் தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்டார். அன்று தொடங்கிய அந்த நஞ்சு இன்றைய இந்திய அரசியல்வாதிகளின் (குறிப்பாக தமிழர்களின்) பிரிவினைவாத பிரசாரங்களுக்கும் அவர்கள் அரியனை ஏறுவதற்கும் மிகவும் பயன்பட்டது.

இப்படி பலவிதத்தில் தங்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காகவும், இந்திய திருநாட்டை பிளப்பதற்காகவும், ஏற்கனவே இந்தியா அந்நிய சக்திகளால் ஆளப்பட்டதாகவும், பல விதங்களில் ஆதாரங்கள் என்கிற பெயரில் அர்த்தமில்லாத கூற்றுகளை சில விஞ்ஞான விளக்கங்களோடு அவர்கள் முன்வைத்தார்கள். இப்படி தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது.

நவீன இந்தியா வளரத் தொடங்கியதும், தர்மம் மீண்டும் வெல்லத் தொடங்கியது. 20ம் நூற்றாண்டில் பல இந்தியர்கள் இந்த ஆரிய படையெடுப்பு எனும் கிறிஸ்துவ மத வியாபார உக்தியை புரிந்துக் கொண்டு, அதை பற்றி ஆழமாய் ஆராயத் தொடங்கினர். குறிப்பாக பால கங்காதர திலகர், ஔரொபிந்தர், மற்றும் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகியோரின் பங்களிப்பு இதில் மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த சித்தாந்தத்தை உடைத்தும், உரித்தும் போட்டார்கள். ஆரியர்கள் வெளியில் இருந்த வந்தவர்கள் என்றால் இந்தியாவுக்கு வெளியே அவர்கள் ஏன் எந்த நகரத்தையும் புனித நகரமாக குறிப்பிடவில்லை ? மேலும் இந்தியாவையும், இந்தியாவில உள்ள பல இடங்களையும் மட்டுமே அவர்கள் ஏன் புனித தளங்களாக குறிப்பிட்டார்கள் ? என்று கேட்டார்கள். இதுவரை அதற்கு யாரும் பதில் தரவில்லை. இருந்தால்தானே தருவார்கள்.

அதைப்போலவே அகழ்வாராய்ச்சி துறையில் பல சாதனைகளை புரிந்து இந்தியாவின் நிஜ சரித்திரத்தை, இந்தியர்களின் முன் நிறுத்திய "எஸ் ஆர் ராவின்" பங்களிப்பும், மற்ற விஞ்ஞானிகள் மற்றும் மேதைகளின் ப‌ங்களிப்பும், இந்த ஆரிய படையெடுப்பு சித்தாந்தத்தை தவிடு பொடியாக்கியதில் முக்கிய பங்காற்றின.

முதலில் இவர்கள் கிடைத்த எலும்புகூடுகளை வைத்து ஆரிய, திராவிட இனப்போர் என்று முடிவெடுத்ததை பார்ப்போம். அமேரிக்காவின் பெர்கில்லி பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் "ஜி எப் டேல்ஸ்", தன்னுடைய "The Mythical Massacre at Mohenjo-daro’, என்கிற புத்தகத்தில் இந்த கூற்றை உடைத்து எறிகிறார். ஆரியர்களை திராவிட இனப்படுகொலை செய்ததாய் சொல்லப்பட்ட அந்த சிந்து சமவெளி ஆதாரத்தை அக்கு வேர் ஆணியாக பிய்த்து எறிகிறார். "ஒன்பது வருடமாய் (1922-31) மிகத் தீவிரமாக‌ ஆராய்ந்து பார்த்த பின்னும், இவர்களுக்கு 37 எலும்பு கூடுகளே கிடைத்துள்ளன. அவைகளும் சாதாரண‌மான சாவுகளையே குறிக்கின்றன. அவைகளில் எந்த வித தாக்குதலுக்கு உண்டான அறிகுறியும் தென்படவில்லை. மேலும் இந்த உடல்கள் கிடைத்த அந்த மூன்று கிலோமீட்டர சுற்றளவில் ஒரு போர் நடந்ததற்கான எந்த தடையமும் இல்லை. வாள்களோ, ஈட்டிகளோ, உடைந்த தேர்களோ என்று எதுவுமே இல்லை எதை வைத்துக்கொண்டு இப்படி ஒரு போர் நடந்தது என்று பிதற்றுகிறார்கள்" என்று கேட்கிறார்.

இயற்கை சாவுகளை இந்த மத வியாபாரிகள் இனச்சண்டை என்று எப்படி திரித்தார்கள் பாருங்கள்.

அடுத்து ஆங்கிலேய மதவியாபாரிகள் முக்கியமாக வைத்த ஒரு கருத்து என்னவென்றால், ஆரியர்கள் அந்த காலத்திலேயே குதிரைகள் மேலும், குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களிலும் வந்து சண்டையிடும் வல்லமையை வைத்திருந்தார்கள். இங்கு இருந்த (அதாவது திராவிடர்கள்) அந்த ஆற்றல் இல்லாததால், தங்கள் நவீன யுத்த முறைகளால் அவர்கள் சிறு குழுக்களாய் இந்தியாவில் இருந்த திராவிடர்களை அடித்து தெற்கு பக்கம் விரட்டி, வட இந்தியாவை பிடித்துக் கொண்டனர் என்றார்கள். இதை மேலும் பலமாக்க, சிந்து சமவெளியிலோ, ஹரப்பாவிலோ கிடைத்த ஆதாரங்களின் படி, குதிரைகளை இந்தியாவில் அக்காலத்தில் உபயோகித்ததற்கு ஆதாரம் இல்லை என்று கூறினர். குதிரைகள் பழக்க பட்டதற்கோ, குதிரை கட்டிய தேர்கள் உபயோகப்பட்டதற்கோ சான்றுகளும் கி.மு. 1500 ஆண்டுக்கு முன் இல்லை என்றும் முன்மொழிந்தார்கள். ஆகையால் ஆரியர்களே குதிரைகளோடு கைபர் கணவாய் வழியே வந்து இந்தியாவில் இருந்த திராவிடர்களை அடித்து விரட்டினார்கள் என்று அடித்து விட்டார்கள்.

ஆனால் சமீபகால எஸ் ஆர் ராவ் அவர்களின் அகழ்வாராய்சியின் மூலமாக ஹரப்பாவிலும், மொஹஞ்ச தாராவிலும் நிறைய குதிரை எலும்புகளை கண்டுபிடித்தனர். (அதாவது இவர்களின் கூற்றுப்படி ஆரிய வருகைக்கு முன் இருந்த நாகரீகம்) குதிரைகளின் வரைப்படங்களும், கலிமண் சிற்பங்களும் கிடைத்தன. (படம் பார்க்க) இது இவர்களின் கூற்றை சுக்கு நூறாக்கின. இந்தியா விழிப்படைய தொடங்கியதும், வெள்ளையனின் கிறிஸ்துவ நரிமுகத்தின் முகமுடி கிழிய தொடங்கியது.

அடுத்து இந்த மதவியாபாரிகள் சொன்ன முக்கிய விடயம் என்னவென்றால் ஆரியர்கள் இரும்பை கையாளும் நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தார்கள், அதனால் அவர்களால் திராவிடர்களை வெல்ல முடிந்தது எனும் கூற்று. வேதத்தில் ஆயுதங்களை "அயாஸ்" என்று குறிப்பிடுவதை இவர்கள் இரும்பு என மொழிமாற்றம் செய்தார்கள். மற்றுமொறு காரணம் இந்து சமவெளி நாகரீகத்தில் இரும்பின் உபயோகம் கண்டுப் பிடிக்காதது தான்.

ஆனால் மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளில், "அயாஸ்" என்பது செம்பு மற்றும் வெங்கலத்தை குறிக்கிறது. பின்னர் அயாஸ் எனப்படும் உலோகம் தங்கத்தை தவிர மற்ற உலோகங்களை குறிப்பிடும் ஒரு பொதுவான பெயர் என்று மொழி ஆய்வாளர்களால் அறியப்பட்டது. மேலும் எந்த தசயுக்களை இவர்கள் திராவிடர்களாக சித்தரித்து எழுதினார்களோ, அந்த தசயுக்களும் அயாஸ் எனப்படும் உலோகத்தை உபயோகித்த குறிப்புக்கள் வேதங்களில் நிறைய உள்ளது. ஆகையால் இந்து இரும்பை வைத்து ஆரியன் எனும் இனம் திராவிடத்தை வென்றது எனும் கூற்றும் தவிடு பொடியானது.

அடுத்து மதவியாபாரிகள் கட்டவிழ்த்து விட்ட பொய் என்னவென்றால் வேள்விகளை குறித்தது. ஆரியர்களே வேள்விகளை செய்யும் வழக்கம் உடையவர்கள் என்றும் ஹராப்பா நாகரீகத்தை சேர்ந்த திராவிடம் என்னும் இனத்திற்கு அது பழக்கமில்லை என்றார்கள். ஆனால் ஹரப்பாவில் வேள்விகள் செய்யப்பட்டதற்கான பல ஆதாரங்கள் பிற்காலத்தில் கிடைக்க தொடங்கின. "பி.பி லால்" என்பவரால் இந்திய அகழ்வாய்வு துறை, கலிபங்கன் எனும் இடத்தில் முதன் முதலாய் இவற்றை ஆதார பூர்வமாக கண்டு பிடித்தது. ஆரிய பழக்கங்கள் என்றும் திராவிட பழக்கங்கள் என்று எப்படி வெள்ளைய மத வியாபாரிகள் நம்மை பிரித்து போட்டுள்ளனர் என்பதை இந்த கண்டுப் பிடிப்புகள் நிரூபித்தன.

மற்றுமொரு முக்கிய விடயம் என்ன வென்றால் வேதங்களில் வெளி நாட்டில் இருந்து, இந்தியாவுக்கு படையெடுத்து வந்ததையோ, ஆண்டதையோ குறித்து எந்த குறிப்பும் இல்லை. வேத காலத்தில் ஏழு நதிகளை கொண்ட பகுதியை (சப்த சிந்து) குறித்தே அதிகம் கவனம் செலுத்தினர். புராணங்களோ, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்த மக்களை பற்றியும், மத்திய கிழக்கு நாடுகளில் சமஸ்கிருத பெயர்கள் உடைய இந்திய அரசர்கள் செய்த ஒப்பந்தங்கள் குறித்துமே குறிப்பிடுகிறது. ஆனால் இதை வெள்ளைய மதவியாபாரிகள், ஆரியர்கள் அங்கிருந்து வந்ததாய் திரித்து விட்டு விட்டனர்.

கிறிஸ்துவ மதவியாபாரிகள் இந்து சமவெளியை திராவிடம் எனும் இன‌மே ஆண்டு வந்தனர் என்று சொன்னார்கள். அப்படி ஆரியர்கள் படையெடுத்து திராவிடர்களை விரட்டி இருந்தால், ஏன் சமய ரீதியாக ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் வித்தியாசம் இல்லை ? அவர்களின் புனித நூல்களில் ஏன் இதை பற்றி குறிப்பிடப்படவில்லை ? அவர்களின் சரித்திர ரீதியான பழக்க வழக்கங்களில் ஏன் மாற்றமில்லை ? வடக்கிற்கு, தெற்கிற்கும் ஏன் எந்த பிணக்கமும் இல்லை ? வெள்ளையனின் வருகைக்கு முன் அவர்கள் இருவரும் அமைதியாகத்தானே இருந்தார்கள் ? மொழி ரீதியான போர்கள் ஒன்றையாவது குறிப்பிட முடியுமா ? அப்படி இருந்திருந்தால் இந்த திராவிட மலங்கள் அவற்றை கிண்டி கிளறி பெரிது படுத்தி இருக்குமே ? மிகப்பெரும் ஆசார்யர்களான ஆதிசங்கரர், ஸ்ரீமத் இராமானுஜர், மத்வாச்சாரியார், வல்லபர், நிம்பகர் என எல்லோருமே தெற்கில் இருந்து வந்துதானே வடக்கில் மிகவும் மரியாதையாக வணங்கப் படுகிறார்கள். இவர்களை ஹிந்து மதத்தின் பிற்கால ஆதாரம் என்றே சொல்லலாமே ? தெற்கிலிருந்து ஆதி காலத்திலேயே போதாயன மகரஷியும், ஆபஸ்தம்பர் எனும் தர்ம சூத்திரங்களுக்கு ஆதாரத்தை தந்தவரும் தெற்கிலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே. கைலாயத்தில் இருந்து தமிழை கொண்டு வந்ததாக குறிப்பிடப்படும் அகஸ்திய மகரிஷியோ வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவர் ஆயிற்றே ? வடக்கில் இருந்து திராவிடம் எனும் இனம் விரட்டி அடிக்கப்பட்டது என்று ஒருசிறு குறிப்பு கூட எங்கும் இல்லையே ? என்ன சூழ்ச்சியடா இது ? எதை வைத்தடா நாடகம் போடுகிறீர்கள் ? வெள்ளையன் போட்டு சென்ற மலத்தை இன்னும் எத்தனை நாளைக்குதான் தின்று கொண்டிருப்பீர்கள், திராவிட மலத் தமிழர்களே ?

படையெடுப்பை பற்றி எழுதியவர்கள் இந்து சமவெளியில் சிவனையே வழிப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டு அது திராவிடர்களாக தான் இருக்கும் என்றார்கள். ஆனால் வேத கலாச்சாரத்திற்கோ, சிவன் என்பது அந்நியமானதல்ல. அது தெற்கிற்கு மட்டுமே உரித்தானதல்ல (தெண்ணாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி) சிவன் என்கிற வார்த்தையே, சமஸ்க்ருத வேர் சொல்களான "சி" எனும் மங்களகமான, அருள்நிறைந்த, உதவக் கூடிய என்கிற பொருள் கொண்டது. அதோடு மட்டும் இல்லாமல் சைவர்களின் மிக புனித நகரங்களான பரம‌சிவன் உறையும் கைலாய‌ மலையும், காசி விஸ்வநாதர் ஆலயமும் வடக்கில்தான் உள்ளது. ரிக் வேதம் சிவனுக்கும், மற்றொரு பெயரான ருத்ரனுக்கும் மிக முக்கிய இடத்தை தந்துள்ளது.

ஆக சிவன் தெற்கில் உள்ள திராவிடர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் கடவுள் மட்டுமே அல்ல. அவர் வேதங்களில் குறிப்பட படாதவரும் அல்ல. எப்படி பார்த்தாலும் பிரிக்க முடியாத இறைவனாகவே பரமசிவன் இருக்கிறார்.

ஆங்கிலேய மதவியாபாரிகள் பிரிக்க வேண்டும் எனும் சூழ்ச்சியை இலக்காக வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப எதை எப்படி திரித்துக் கொடுத்தால் அதை ஆதாரத்தோடு சொல்வது போல் செய்யலாம் என்று திட்டமிட்டு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான வருடமாய் அனைத்தையும் கடந்து, அனைத்தையும் உடைத்து, பெரு வெள்ளமாய் ஓடிக் கொண்டிருக்கிறதே தர்மம், அதை அடக்கத்தான் முடியுமா ?

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஆரிய படையெடுப்பு சித்தாந்தத்தை, சவப்பெட்டியில் வைத்து கிறிஸ்துவ மதவியாபாரிகளுக்கே திருப்பி தரும் வகையில், பலம் பொருந்திய கடைசி ஆணியாக‌ சரஸ்வதி நதியின் இருப்பை பற்றிய ஆதாரங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நமக்கு கிடைத்தது.  அது என்ன ?

ஹிந்துக்களின் புனித நதியான கங்கை, ரிக் வேதத்தில் ஒரே ஒரு முறைதான் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் சரஸ்வதி நதியோ குறைந்தது 60 முறை சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மத வியாபாரிகள் இந்த நதியின் குறிப்பை ஏதோ கற்பனை என்று நினைத்தார்கள். இல்லை எங்கோ மத்திய ஆசியாவில் இந்த நதி இவர்களின் கற்பனை ஆரிய படையெடுப்பு சித்தாந்தப்படி ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைத்தார்கள்.

ஆனால், இப்பொழுது வரண்டு காணப்படும் இந்த நதி, ஹிமாலயத்திலிருந்து புறப்பட்டு, ராஜஸ்தானிய பாலைவணங்கள் வழியாக கடலுக்கு சென்று உள்ளது. டாக்டர் "வாகான்கர்" எனும் ஆராய்சியாளர் சரஸ்வதி நதி கி.மு. 1900 வருடத்தில், அது வரண்டு போவதற்கு முன், தன் வழியை நான்கு முறை மாற்றியுள்ளதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

செயற்கை கோள்கள் உதவியோடு செய்யப்பட்ட அகழ்வாராய்சிகள். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதி, கி.மு. 3000 ஆண்டுகளிலேயே தன் நிலையான ஓட்டத்தன்மையை இழந்து விட்டதை காட்டியுள்ளது.

பாரீசை சேர்ந்த "பால் ஹென்றி ஃப்ரான்க்ஃபோர்ட்" எனும் அறிஞர் கூறுகிறார்.
"ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த மக்கள் இங்கு இருக்கையில் மிகப்பெரும் நதி ஒன்று பல காலமாக ஒடிக் கொண்டிருந்ததை கண்டுப்பிடித்ததற்கு இந்தோ-ப்ரெண்சு கூட்டு ஆய்வுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்" என்று.

செயற்கை கோள்கள் சரித்திரத்திற்கு முந்தைய ஒரு நதி ஏழு கிலோமீட்டர் அகலத்திற்கு ஓடிக் கொண்டிருந்ததை ஊர்ஜிதப் படுத்துகிறது. அதுதான் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதி. இந்த வறண்ட நதியின் கரை ஓரங்களில் பல புராதான சின்னங்களும், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தபடி கிடைத்தன. இமயமலையில் இருந்து புறப்பட்டு ஓடிய அந்த நதியின் காலத்தை "கி.மு. 3000 த்திற்கு முன்" என்று கணக்கிட்டு உள்ளனர். இதிலிருந்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வட இந்திய பகுதிகள் கி.மு 3000 க்கு முந்தியவை என்றும் ரிக் வேதம் கி.மு. 3500 க்கு முந்தையது என்பதையும் இது ஊர்ஜிதப்படுத்துகிறது.

இத்தனை ஆதாரத்தோடு கூடிய இந்த சரஸ்வதி நதி, ஆரியர்களுக்கு நன்கு பரிச்சயமான, அவர்களின் வாழ்க்கையில் இரண்டர கலந்திருந்தது என்பது உண்மையாகிறது. ஆக வேதங்கள், சரஸ்வதி நதியை அழியும் நதி என்று குறிப்பிட்டுள்ள மஹாபாரதத்தை விட மிகப் பழமையானது என்பதும், இதில் இருந்து தெரிகிறது.

இந்திய துனைக்கண்டத்தில் பல இனங்கள் இருந்து வந்தன என்பது அனைவருக்கும் தெரியும். மஹாபாரதத்திலேயே, பல இனங்களை குறித்து எழுதப்பட்டுள்ளது. அதில் வெள்ளைக்கார மத வியாபாரிகள், ஆரியம் திராவிடம் என்ற இரண்டை மட்டும் பொறுக்கி எடுத்து நம்முள் எப்படிப்பட்ட விஷத்தை விதைத்து விட்டு சென்றுள்ளார்கள் பாருங்கள்.

நண்பர்களே, ஆதாரத்தோடும், விளக்கங்களோடும் இந்த கட்டுரையை எழுதியுள்ளோம். இந்த கட்டுரை ஆரிய படையெடுப்பு எனும் புரட்டு சித்தாந்ததை பற்றி ஒரு நிஜமான கேள்விகளோடும் ஐயங்களோடும் இருப்பவர்களுக்கு மட்டுமே. ஆரிய-திராவிட பிரிவினையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும், மதம் மாற்றுபவர்களுக்கும் அல்ல. ஏனென்றால் அவர்கள் பேசுவது பிழைப்புக்காக, அவர்கள் பிழைப்பில் நாம் ஏன் மண் அள்ளி போட வேண்டும் ?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு !!

இதைப் படித்த அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள். முடிந்தவரை இதை அனைவருக்கும் சொல்லுங்கள். பகிருங்கள். கடைசியாக, சத்தியத்தை பற்றிய ரிக் வேதத்தின் ஒரு கூற்று உங்களுக்காக.

सा मा सत्योक्तिः परि पातु विश्वतो द्यावा च यत्र ततनन्नहानि च ।
विश्वमन्यन्नि विशते यदेजति विश्वाहापो विश्वाहोदेति सूर्यः ॥ १०.०३७.०२ ॥

எதனால் சுவர்கமும் பூமியும் ஆளப்படுகிறதோ, எதனால் இரவும் பகலும் நீள்கிறதோ, எதனால் படைப்புகள் அனைத்தும் தாங்கப்படுகிறதோ, எதனால் தண்ணீர் ஓடுகிறதோ, எதனால் சூரியன் உதையமாகிறதோ அந்த எங்கும் நிறைந்த சத்தியம் என்னை காப்பாற்றட்டும் 10.037.02

2 comments:

Hayagriva Dasan said...

உங்கள் பணி சிறக்க இறைவன் என்றும் துணை இருக்கட்டும்..

Hayagriva Dasan said...

உங்கள் பணி சிறக்க இறைவன் என்றும் துணை இருக்கட்டும்..