அல்லேலூயாக்களின் அராஜகங்கள் !!

நடிகர் அஜித் ஒரு திரைப்படத்தில் கையையும் காலையும் சுருக்கிக் கொண்டு மாற்று திறனாளி போல போலீஸிடம் காட்டிக் கொள்வார். ஆட்டோ டிரைவர் கருணாஸ் எத்தனை சொல்லியும் அவரை நம்பாமல் கருனாஸையே நைய புடைப்பார்கள் போலீசார். அப்படி அருமையாக நடிப்பார் அஜித்.

ஆனால் அஜித்தை விட சுவிசேஷக் கூட்டங்களில் மாற்று திறனாளிகளாய் நடிக்கும் நடிகர்க‌ள் மிகவும் பாராட்டுக்கு உரியவர். கால் கை விளங்காதவாறு அஜித்தை விட சிறப்பாக மேடை ஏறுவார்கள். மேடைக்கு சென்றதும் அவர் தலையில் கை வைத்து ஏசுவை இறக்கி விடுவார்கள். அவர் துள்ளி குதித்துக் கொண்டு புள்ளி மானாய் ஓடுவார்.

வேறு சிலரோ நடிகர் விக்ரம் ஒரு படத்தில் பார்வையற்றவராக நடித்ததை விட சிறப்பாக நடித்தவாறு மேடைக்கு செல்வார்கள். மேடையில் ஆவேசத்தோடு ஜெபிக்கப்பட்டு யேசு இறக்கப்பட்டதும் பார்வை பெறுவார் நம் நடிகர்.

ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் விட சிறந்த நடிகன் மேடையின் ஜெபம் செய்யும் யேசுவின் பிரதான ஏஜன்ட்தான். கண்களை மூடிக் கொண்டு இவர் செய்யும் நவரச பாவனைகள் யாராலும் செய்ய முடியாது. கண்களின் க்ளிசரின் இல்லாமல் தாரை தாரையாய் கண்ணீர் பெருகும். யேசுவை நேரில் பார்த்து உருகுவது போல் முகபாவங்களை மாற்றிக் காட்டுவார். பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞர் கூட இத்தனை முக பாவத்தை தருவிக்க இயலாது.

என்ன அப்படிப்பட்ட ஒரு மகா நடிகனால் தான் பல கோடி சொத்துக்களை ஈட்ட முடியும். அப்படி பலரை மதமாற்றி வெள்ளையர்களிடம் இருந்து பல கோடிகளை பெற்றவர் தினகரன் என்கிற ஒரு சாதாரண வங்கி அதிகாரி. ஆனால் நோய்வாய்பட்டு, பல நாட்க‌ள் படுத்த படுக்கையாய் மருத்துவமனையில் கிடந்த போது பாவம் யேசு வரவேயில்லை.. இவரின் ஒரே மகளோ ஜெப‌க் கூட்டம் முடிந்து திரும்புகையில் விபத்தால் இறந்தார்.

எந்த யேசுவை அழைக்கிறார் அழைக்கிறார் என்று மக்களை அழைகழித்து ஏமாற்றி சொத்துக்களை குவித்தார்களோ, அவர்களுக்கு இதுதான் முடிவு. யேசு அழைக்கிறார் அழைக்கிறார் என்று சொன்னது உண்மையாகிவிட்டது. இவர்களை யேசு எம லோகத்திற்கு அழைத்து விட்டார்.

************************************************************************


இஸ்லாம்தான் உலகின் மிக தீவிரவாத மதம் என்பது போல் ஒரு மாயையை உருவாக்கி விட்டன கிறிஸ்துவ நாடுகளும் அதன் ஆளுமையில் இருக்கும் ஊடகங்களும். தங்களின் ரத்தம் தோய்ந்த சரித்திரத்தை உலகின் பார்வைக்கு படாமல் மறைத்துவிட்டு முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் வெற்றியும் கண்டு விட்டன. அமெரிக்கா போன்ற கிறிஸ்துவ நாடுகளோ மிக கட்டுக் கோப்பாக, ரகசியமாக, ஒற்றுமையுடன் தங்கள் மதத்தை பரப்பி வருகின்றனர். தங்கள் மதத்தினை பரப்புவதன் மூலமாக உலக நாடுகளின் மேல் தங்கள் ஆளுமையை நிலைநாட்ட முடியும் என்று அவை கருதுகின்றன. இதற்கு உதவும் வகையில் இஸ்லாமியர்கள் சிலர் கடைந்தெடுத்த முட்டாள்களாக, முரட்டு தனத்தை முன்வைப்பதால், மொத்த சமூகத்தின் மேலும் உலகளாவிய ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இஸ்லாமில் உள்ள வஹாபிய வெறியர்களை கழித்து விட்டு பார்த்தால் பல தெளிந்த சிந்தனையாளர்களையும், சகிப்பு தன்மை கொண்டவர்களையும் நாம் பார்க்க முடியும்.

ஆனால் இந்த உலகில் கிறிஸ்துவம் வளர்ந்த சரித்திரத்தை போல் ஒரு ரத்த களறியான சரித்திரத்தை நீங்கள் பார்க்கவே முடியாது. இஸ்லாம் வாளால் வளர்ந்தது என்றாலும், அதை கிறிஸ்துவத்தோடு ஒப்பிடுகையில் அது எவ்வளவோ பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும்.

உலக சரித்திரத்திலேயே மிக மோசமான கொடுங்கோலன் என்றால் அது "கொலம்பஸாக" தான் இருக்கும். இந்த கிறிஸ்துவ மிஷநரி அடிமை வியாபாரிதான் உலகின் மிகபெரிய இனப்படுகொலைக்கு வித்திட்டவன்.

கிறிஸ்துவ நாடுகளின் தாக்குதலினால் 15ம் நூற்றூண்டில் மட்டும், அமெரிக்க பூர்வ குடிகள் 13.5 கோடி பேர் அழிக்கப்பட்டனர். அதாவது அதே கால கட்டத்தில் இந்திய பாகிஸ்தானின் மொத்த ஜனத்தொகையும் அதைவிட குறைவாகவே இருந்தது. அந்த இனப்படுகொலையில் சிக்காத ஓரிரு குடும்பங்கள் இப்போது 500 வருடங்களில் வெறும் 50000 மாக உள்ளனர். அதாவது அந்த இனப்படுகொலை நிகழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு செவ்விந்தியர்கள் கிட்டத்தட்ட 150 கோடி இருந்திருப்பார்கள். பல பழமை வாய்ந்த கலாச்சாரங்கள் இவர்களால் பூண்டோடு அழிக்கப்பட்டன. இந்த விவரங்கள் American Indiao Holocause and Survival என்கிற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பெயின் போன்ற வெறி பிடித்த கிறிஸ்துவ நாடுகளை அப்போது வழிநடத்துவதில் பிரதானமாக இருந்தவர்கள் கிறிஸ்துவ பாதிரிகள்தான் என்பது வரலாற்று உண்மை.

இப்படி ஒரு இனப் படுகொலை உலக சரித்திரத்தில் எப்போதுமே நடந்தது இல்லை. தெற்கு அமெரிக்காவிலோ பல கோடி மக்கள் கிறிஸ்துவத்துக்கு ரத்தம் சொட்ட சொட்ட மதமாற்றம் செய்யப்பட்டனர்.

இத்தனையும் செய்து விட்டு இந்த மத புரோக்க‌ர்கள் "யேசு அன்பை போதிக்கிறார், அன்பு கொள்ளுங்கள்" என்கிறார்களே. இவர்களை எந்த செருப்பால் அடிப்பது ?

********************************************************


கிறிஸ்துவத்தில் சாதி இல்லை, கிறிஸ்துவர்கள் ஒரே குடும்பமாய் உள்ளார்கள். கிறிஸ்துவ பைபிள் எல்லோருக்கும் பொது என்றெல்லாம் சிலர் எழுதும் போது வேடிக்கையாக உள்ளது. கிறிஸ்துவத்தில் பிரிவுகள் இல்லையா ? பிரிவு சார்ந்த பேதங்களும், சண்டைகளும் இல்லையா ? பின் ஏன் கத்தோலிகர்களும், ப்ராடஸ்டுகளும் பல நூற்றாண்டுகள் சண்டையிட்டுக் கொண்டார்கள் ? ஐரோப்பிய வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியாதா ? அயர்லாந்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை படித்து பாருங்கள்.

பைபிள் என்பது ஏதோ யேசுவே கைப்பட எழுதி கையெழுத்து போட்டு கொடுத்த ஒரு புத்தகம் போல் ஒரு மாயையை உருவாக்குகின்றனர் பல மத வியாபாரிகள். உண்மையில் யேசு என்று ஒருவர் இருக்கப்பட்டதாக சொன்ன காலத்திற்கு பின், பல ஆண்டுகள் கழித்து பலரின் கடிதங்கள், குறிப்புகள் ஆகியவற்றை வைத்து தொகுக்கப்பட்டதுதான் "ஹோலி பைபிள்" என்று அழைக்கப்படும் "கிறிஸ்துவ பைபிள்". இன்றைய தேதியில் பல ஆயிரம் பைபிள்கள் உள்ளன. மேலும் ஒரு பிரிவினரின் பைபிளை மற்ற பிரிவினர் ஏற்பதில்லை. புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் கிறிஸ்துவ பைபிள் முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டு, பின்பு லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் லத்தீனில் இருந்து ஆங்கிலத்தில் பல விதமாக மொழி பெயர்க்கப்பட்டு, பின் தற்போது ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பலவாறு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவத்தில் மட்டும் 41000 பிரிவுகள் இருக்கின்றன என்கின்றனர். இப்படி பல ஆயிரம் பிரிவுகள், பல விதமான நம்பிக்கைகள். ஒருவர் மற்றவரின் சர்ச்சுக்கு போவதில்லை. உதாரணத்திற்கு ஒரு கத்தோலிக்கர் ஒரு ப்ராட்ஸ்டன்ட் (சி எஸ் ஐ) சர்ச்சுக்கு போய் நான் பார்த்ததில்லை. மேலும் ஒருவரின் சுவர்கத்தில் மற்ற பிரிவினருக்கு இடம் இல்லை. ஒருவர் மற்றவரை ஏற்பதில்லை. கத்தோலிக்க போப் நரகத்துக்கு செல்வார் என பல பெந்தகொஸ்டுகள் பிரச்சாரம் செய்வதை பார்க்கலாம். இதில் ஒரே குடும்பம் என்றெல்லாம் வேறு காமெடி செய்கிறார்கள் !!

இந்துக்கள் சாதி பார்க்கிறார்கள் என்று பேசுபவர்கள், கிறிஸ்துவத்திற்கு மதமாறிவிட்டால் அது சரியாகி விடுமா என்றால் நிச்சயம் இல்லை என்பதுதான் பதில். உதாரனத்திற்கு நாடார் கிறிஸ்டியன், நாடார் கிறிஸ்டியனோடுதான் சம்பந்தம் பேசுகிறார். தலித் கிறிஸ்டியன் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார். எங்கே ஒழித்தீர்கள் சாதியை ? 41000 பிரிவுகளோடு பல சாதி பிரிவுகளும் சேர்ந்துவிட்டன அவ்வளவே !!

அன்புதான் கிறிஸ்துவத்தின் அடித்தளம் என்று வேறு அடித்து விடுகிறார்கள். அமெரிக்காவில் 13.5 கோடி அப்பாவி செவ்விந்திய மக்கள் ஐரோப்பிய கிறிஸ்துவர்களால் கொன்று குவிக்கப்பட்டனர். லத்தீன் அமெரிக்காவிலோ மிக கொடுமையான சித்ரவதைக்கு அவர்கள் ஆட்படுத்தப்பட்டு, ஸ்பானிய, போர்ச்சுக்கீசிய‌ கிறிஸ்துவ மதவெறியர்களால் மதமாற்றம் செய்யப் பட்டனர். ஆப்ரிக்காவை பொறுத்தவரை இவர்கள் அங்கிருந்த பல்வேறு பழங்குடியினரை மதமாற்றியது கண்களில் ரத்தத்தை வரவழைத்துவிடும். "எங்கள் நாட்டுக்கு பாதிரிகள் வந்த போது நாடு எங்களிடம் இருந்தது, பைபிள் பாதிரிகளிடம் இருந்தது, பைபிளை கொடுத்து எங்களை பிரார்த்தனை செய்ய சொன்னார்கள். நாங்கள் விழிக்க தொடங்கிய போது பைபிள் எங்களிடம் இருந்தது, நாடு அவர்களிடம் போய் விட்டது" என்று ஒரு பிரபல ஆப்ரிக்க அறிஞர் கூறியதை நினைவு கூறுகிறேன். பல‌ ஆப்ரிக்க பழங்குடி இன‌ங்களையும், மதங்களையும் கிறிஸ்துவம் பூண்டோடு அழித்து விட்டது.

ஆஸ்த்ரேலியாவிலோ கேட்கவே வேண்டாம். இவர்கள் அந்த கண்டத்தை பிடித்ததும் அங்கிருந்த பழங்குடியினரை கொன்று குவித்தனர். இன்று உண்மையான ஆஸ்த்ரேலியர்கள் "இண்டிஜினியஸ் பீபிள்" என்று ஒரு புதிய வார்த்தையில் அழைக்கப்படுகின்றனர். ஆசியாவில் இவர்களின் வன்முறை தாண்டவம் மிகக் கொடூரமானது. உதாரணத்திற்கு "பிலிப்பைன்ஸ்"ஐ பிடித்த ஸ்பானிய படை அங்கிருந்த பெண்களை வரிசையில் நிற்க வைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, தொடர்ந்து வன்புணர்வு செய்து வாரிசுகளை உருவாக்கி, அதை கிறிஸ்துவ நாடாய் மாற்றியது வரலாறு. உலகிலேயே வன்முறையில் பரவிய மதத்தில் முதன்மையானது கிறிஸ்துவம் என்றால் அது மிகையில்லை.

இன்றைய காலத்தில் வன்முறை வேலைக்கு ஆகாது என்பதால் ரொட்டிகளை வீசத் தொடங்கியுள்ளனர். இதெல்லாம் நம் பாரதத்தில் ரொட்டி துண்டுகளுக்கு மத மாறியவர்களின் வாரிசுகள் அறியாதது, சொன்னாலும் புரியாதது.

**************************************


திராவிட அரசியல்வாதிகள் காலை டிபனை முடித்து விட்டு, மதிய உணவு வரை "உண்ணா நோன்பு" இருப்பதாக சொல்லி கேட்பதுண்டு. உபவாசம் என்பது சமஸ்க்ருத சொல்லாம் அதை பயன்படுத்த கூடாதாம். ஆனால் இப்போது பல குட்டி சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்களின் காணப்படுவது "உபவாச ஜெபம்" என்பதே. "ஃபாஸ்டிங்" என்பது வெள்ளையர் மதத்தில் வருடத்திற்கு ஒரு சில முறைகள் உள்ள பழக்க வழக்கம் என்றாலும் அதை "உபவாசம் ஜெபம்" என்று அழைத்து கொண்டு, வெள்ளையர் மதம் ஏதோ நம் நாட்டில் தொன்று தொட்டு வேர் விட்டது போல் ஒரு எண்ணத்தை பாமர மக்களிடம் உருவாக்க முனைகிறார்கள் அவர்க‌ள்.

தமிழகத்தை பொறுத்தவரை வெள்ளையர் மதத்தினர் இப்படி ஒரு பக்கம் திராவிட ரௌடிகளை மற்றும் அரசியல்வாதிகளை பயன்படுத்தி சமஸ்க்ருத சொற்களை களைவதற்கும், சமஸ்க்ருத மந்திரங்கள் கோவில்களில் பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கும் காய் நகர்த்துகிறார்கள். மறுபுறம் ஆசிர்வாதம், சுவிசேஷம், ஜெபம், ஆராதனை, வேதம், வேதாகமம், உபவாசம் என்று அனைத்து சமஸ்க்ருத சொற்களையும் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் தங்கள் மதம் வெள்ளைக்காரர்களால் கொண்டு வரப்பட்ட ஒரு அந்நிய மதம் இல்லை, இது பல்லாயிரம் ஆண்டுகள் இந்தியாவிலேயே வளர்ந்த ஒரு மதம் என்பதாய் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். இதற்கு துனையாக தாமஸ் எனும் யேசுவின் சீடன் படகில் வந்து கேரளத்தை அடைந்தார் என்று வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட போலி கதைகளை காட்டுகிறார்கள்.

இப்படி ஒரு புறம் திராவிட ஏஜண்டுகள் மூலம் சமஸ்க்ருதத்தை எதிர்ப்பதும், மறுபுறம் சமஸ்க்ருதத்தின் ஒவ்வொரு சொற்களையும் வைத்துக் கொண்டு பாமர மக்களிடம் வார்த்தை ஜாலம் புரிவதுமாய் இருக்கிறார்கள். ஆரிய பழக்க வழக்கங்கள் என்று திராவிட ரௌடிகளால் குறிப்பிடப்படுகிற அனைத்து ஆகம வழக்கங்களையும் இப்போது அவர்கள் தங்கள் வெள்ளைக்கார மதத்தில் நுழைப்பது, நாங்களும் பழமையான பாரத மதம்தான் என்பதை காட்டத்தான். இரண்டு நாள் முன்பு கேரளா சென்றிருந்த ஒரு முகநூல் நண்பர் அங்கு பெருவாரியான சர்ச்சுகளின் முன் "த்வஜஸ்தம்பங்கள்" வைக்கப்பட்டிருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தார்.

ஆக இந்த மதவியாபார‌ பயங்கரவாதிகள் ஒரு புறம் ஆரிய-திராவிடம், தமிழ்-சமஸ்க்ருதம் என்று நம்மிடைய வேற்றுமையை வளர்த்தி, நம்முடைய பண்டைய மகத்துவத்தை நாம் உணராமல் செய்து விடுகிறார்கள். மறுபுறம் அந்த பண்டைய மகத்துவங்களை திருடிக் கொண்டு, பாமர மக்கள் முன்பு தங்களை ஒரு பழமையான மதம் என்பது போல் காட்டிக் கொள்ளும் யுக்தியை கையாள்கிறார்கள். நாம் மட்டும் இன்னும் கற்பனையாக புகுத்தப்பட்ட ஆரிய திராவிட சண்டையில் முனைப்புடன் இருக்கிறோம்.

**********************************************************

இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கு நடக்கும் முகநூல் விவாதங்களில் ஒன்றை நாம் தெளிவாக பார்க்கலாம். இந்துக்களின் வசம் எத்தனையோ அற்புதமான சித்தாந்தங்களும், புனித புத்தகங்களும் இருந்தாலும் அவற்றை அவர்கள் வெட்டி ஒட்டுவதில்லை. மிகப்பெரும்பாலும் சுயமாகவே விவாதிப்பார்கள். இத்தனைக்கும் இந்துக்களிடம் ஈடு இனையற்ற வேதங்கள் இருக்கின்றன‌, 108 உபநிடதங்கள் இருக்கின்றன. பிரம்ம சூத்திரம் இருக்கிறது. ஒப்பற்ற கீதை இருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் இருக்கின்றன. பாமரர்களை கவர்வதற்கு பலவிதமான புராணங்கள் இருக்கின்றன. திகட்டாத ஆழமான உட்பொருள்களை கொண்ட திருவாசகம், திருவாய்மொழி, தேவாரம், திருமந்திரம், திருப்பாவை, திருவெம்பாவை என எத்தனையோ இருக்கின்றன. இத்தனை இருந்தும் விவாதத்தின் போது அவற்றில் இருந்து வெட்டி ஒட்டும் இந்துக்களை நாம் பார்க்க முடியாது. அனைவரும் சுயமாக விவாதிப்பதையே நாம் பார்க்க முடியும்.

ஆனால் அங்கே என்ன நடக்கிறது பார்ப்போம்.

புதிய ஏற்பாடு என்று சொல்லப்படும் 27 தொகுப்புகளில் உள்ள கதைகள், கடிதங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை "ஹோலி பைபிள்" என்கிற ஒரு புத்தகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஹோலி பைபிளின் அமைப்பு ஒவ்வொரு கிறிஸ்துவ பிரிவுக்கும் ஒவ்வொரு வகையாக உள்ளது. அதில் சித்தாந்தங்கள் எதுவும் பெரிதாக இல்லை. வெறும் உணர்ச்சி பூர்வமான கதைகள், கடிதங்கள். அற்புதங்கள் என்கிற பெயரில் சில மாயாஜால கதைகள் காணப்படுகின்றன‌. சித்தாந்தங்கள் என்று சொன்னால் அது பழைய ஏற்பாடு என்று சொல்லப்படும் யூதர்களின் புனித நூல்கள்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் விவாதத்திற்கு வருபவர்கள் அனைவரும் சுயமாக விவாதிக்காமல் இந்த "ஹோலி பைபில்" என்று சொல்லப்படும் தொகுப்பில் இருந்து பலவற்றை வெட்டி ஒட்டுவதுதான். எதை கேட்டாலும் "பைபிளில் இருக்கிறது அதனால் சரி" என்கிற மனநோய் பதில்தான் இவர்களிடம் இருந்து வருகிறது. இல்லையென்றால் சில கிறிஸ்துவ மத புரோக்கர்கள் இந்து நூல்களை தவறாக சித்தரித்து எழுதும் கட்டுரைகளை அப்படியே வெட்டி, தாங்கள் எழுதியது போல் இங்கே பதிவில் ஒட்டுவார்கள்.

இத்தனைக்கும் இந்துக்களுக்கு போதிய சமய கல்வி இல்லை. தர்ம விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிகள் இல்லை. ஆனால் கிறிஸ்துவர்களுக்கோ ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு சர்ச்சுகளிலும் மத போதனை உள்ளது. அவர்களின் மதத்தை குறித்து பலவற்றை கற்று கொடுக்கிறார்கள். ஆனால் புனித புத்தகத்தில் புதைந்து போன இவர்களால் சுயமாக எதையும் விவாதிக்க முடிவதில்லை. எதை எடுத்தாலும் "நம்பு, கேள்வி கேட்காதே" என்றே பழக்கிவிட்டனர். இதனால்தான் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் சொன்னதையே திருப்பி சொல்லும் கிளிப்பிளைகளாக , ஒரே கதையை திரும்ப திரும்ப ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி திரும்ப திரும்ப பைபிள் வாசகங்கள் வெட்டி ஒட்டும்போது, நாமும் "எலி எலி லமா சபச்தனி" என்று யேசு மரண நேரத்தில் "இறைவா என்னை கை விட்டு விட்டாயே" என்று கதறியது போல் கதற தோன்றுகிறது.

***********************

வெள்ளையர் மதம் என்று கிறிஸ்துவத்தை சொன்னால் பலருக்கு கோபம் வருகிறது. கிறிஸ்துவ அன்பர்களே நீங்கள் எத்தனை கோடிகளை கொட்டி பிரச்சாரம் செய்தாலும் கிறிஸ்துவத்திற்கும் தமிழிற்கும், அல்லது கிறிஸ்துவத்திற்கும் நம் பாரதீய கலாச்சாரத்திற்கு ஏழாம் பொருத்தம் அல்லவா ?

"ஹோலி பைபிள்" எனப்படும் கிறிஸ்துவர்களின் புனித புத்தகம் எழுதப்பட்டது யேசு இருந்த ஊரில் காணப்பட்ட "ஹிப்ரூ" மொழியிலோ அல்லது "அராமைக்" மொழியிலோ அல்ல. அது எழுதப்பட்டது வெள்ளையர்களின் மொழியான "கிரேக்க" மொழியில்தான்.

மேலும் யேசு இன்றைய இஸ்ரேல் எனப்படும் ஜெருசலத்தில் பிறந்தார், அது ஆசியாவின் எல்லையில்தான் உள்ளது என்று இவர்க‌ள் சொல்லலாம். ஆனால் யேசுவை வைத்து "கிறிஸ்துவம்" என்று தொடங்கப்பட்ட மத‌வியாபாரம் ரோமாபுரியிலும், அதன் பின் கத்தி முனையில் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரப்பப்பட்டது என்பது ஆணித்தரமான உண்மை. கிறிஸ்துவம் இப்படி பரப்பட்டதற்கு அனைத்து விதமான ஆதாரங்களும் வெள்ளையர்களில் வரலாற்று நூல்களிலேயே உள்ளன. ஐரோப்பாவிலும் இருந்தும் மற்ற நாடுகளுக்கு கிறிஸ்துவம் கத்தி முனையிலேயே பரப்பப்பட்டது என்பதும் உலக அறிஞர்கள் அனைவரும் அறிந்த உண்மை.

ஆக ஆரம்ப காலங்களில் "பவுல்" எழுதிய உணர்ச்சிமயமான கடிதங்களால் ரோமாபுரியில் பரவிய கிறிஸ்துவம் ஐரோப்பாவில் முழுக்க முழுக்க பரவியது வன்முறையால்தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமியர்கள் மத குருக்கள் மத விரோதிகளை கொலை செய்ய "ஃபட்வா" என்று அழைக்கப்படும் மதக்கட்டளைகளை இடுவதற்கு முன்னொடியாக இருந்தது கிறிஸ்துவம்தான். இது பலருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு உள்ளது. மதத்தை பரப்புவதற்கு 'க்ருசேட்ஸ்" (crusades) என்கிற பெயரில் சிலுவை போரில் ஈடுபடுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் அவர்கள் யேசுவுக்காக போர் புரிகிறார்கள் என்று அறிவுறுத்தப் பட்டார்கள்.
[Pope Urban II promised forgiveness of all sins to whosoever took up the cross and joined in the war. While there were additional motivations for taking up the cross—opportunity for economic or political gain, desire for adventure, and the feudal obligation to follow one’s lord into battle—to become a soldier for Christ ]

தற்போது வன்முறையால் தங்கள் மதத்தை பரப்ப முடியாது என்பதால் ஊழியம் செய்து மதத்தை பரப்புங்கள் என்று யேசு சொல்வதாய் மாற்றி விட்டார்கள்.

இன்று வெள்ளையும் சொல்லையுமாக அமைதி தூதுவர்களாய் கை அசைக்கும் "போப்புகள்" கட்டவிழ்த்துவிட்ட வன்முறை கொஞ்ச நஞ்சமல்ல. உலகையே இவர்கள் மதத்தின் பெயரால் ரத்த வெள்ளத்தில் நனைய வைத்தார்கள். பல‌ போப்புகள் 'க்ருசேட்ஸ்" (crusades) என்கிற பெயரில் இன அழிப்பிற்கான மதக்கட்டளைகளை இடுவது வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவையே கிறிஸ்துவ மயமாக மாற்றும்வரை இது ஓயவில்லை. அதன் பின்னர் தாங்கள் பிடித்த அமெரிக்க, ஆப்ரிக்க, ஆசிய, ஆஸ்த்ரேலிய கண்டங்களையும் இவர்கள் இதே பாணியில் கிறிஸ்துவமயமாக்கினார்கள். கீழே போப்புகளின் "க்ருசேட்ஸ்" சிலவற்றின் சாம்பிள்கள்.

Pope Celestine III called for a crusade against pagans in Northern Europe in 1193. Bishop Berthold of Hanover arrived with a large contingent of crusaders in 1198, but he was killed in battle and his forces were defeated. To avenge Berthold, Pope Innocent III issued a bull declaring a crusade against the Livonians, who were mostly still pagan. Pope Honorius III called a crusade against the Prussians in 1217. Pope Honorius III called a crusade against supposed Cathar heretics in Bosnia.

1 comment:

Kannan Venkatachalam said...

Mention posted by Prakash P (Enlightened master's Enlightened voice)