முன்னுரை


யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம் விருப்பமும் அல்ல. பலர் என்னை பார்த்து கேட்கும் கேள்விகள், ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து இதை கேட்பதுண்டு. எதற்காக மத ரீதியான பதிவுகளை இட வேண்டும்? எதற்காக மற்ற
மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து, அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க  வேண்டும்?.

எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க வேண்டும்? நல்ல விஷயங்களை குறித்து எழுதலாமே? நம் தர்மங்களை குறித்து எழுதலாமே? நம் உயிரினும் மேலான தேசத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாத அற்புதமான மனிதர்களை குறித்து எழுதலாமே? பலரின் எதிர்ப்பார்பில்லாத சேவைகளை பாராட்டி எழுதலாமே? இப்படி பல பல கேள்விகள் இந்த கேள்விகள் வரும் பொழுதெல்லாம் என்னுள்ளும், உங்களுள்ளும் உரைந்திருக்கும் இறைவனே உள்ளுனர்வாய் பதில் தருகிறான்.

இதே சூழ்நிலைதானே அர்ஜுனனுக்கு? கௌரவர்கள் பக்கம் கேடு கெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பீஷ்மர், துரோனர், கர்ணன் போன்ற பல நல்லவர்களும் இருக்கிறார்கள். பாண்டவர்கள் சமாதனத்திற்காக எத்தனையோ முயற்சி எடுத்தும் யுத்தத்திற்கு ஆசைப்பட்டது கௌரவர்கள் தான். இங்கே இறைவன் சொல்வது இதுதான். "பல தீயவர்களுக்கு எதிராக சில நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் எதிர்த்து நீ போராடிதான் ஆகவேண்டும்,  நல்லவர்களின் முழுமுதல் கடமை தீமையோடு சேராது இருப்பது". தீமையோடு சேர்ந்துக் கொண்டு நான் மட்டும் நல்லவன் என்று சொன்னால், அது சரியாகாது. நீ யார் என்பது முக்கியமல்ல, நீ யாரோடு இருக்கிறாய் என்பதுதான் முக்கியம்!!

இன்று இந்த தேசத்தில் ஹிந்துக்களுக்கும் அதே நிலைதான். இந்த யுத்தம் ஹிந்துக்களால் தொடங்கப்பட்டதல்ல. கேடுகெட்ட பல அந்நிய சக்திகளால் தொடங்கப்பட்டது. யார் வீட்டுக்கும் போய் கதவை தட்டி என் ஆண்டவன் உன்னை அழைக்கிறார் என்று நாம் சொல்லவில்லை. உங்கள் கடவுள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டனர் ஆகையால் என் ஆண்டவன் ஒன்றே சத்தியம் என்று நாம் சொல்லவில்லை.

கற்சிலைகள் வழிகெடுக்கும், என் இறைவனே அளப்பெரியவன் என்று நாம் பிரச்சாரம் செய்யவில்லை. படைத்தவனை விட்டு விட்டு படைப்புகளை வணங்காதே என்று நாம் மற்றவர்களின் அடிப்படை சித்தாந்தம் தெரியாமல் உளறவில்லை. பண‌த்தை நாம் இறைக்கவில்லை. ஏழ்மையை நாம் பயன்படுத்தவில்லை. பெண்களை கொண்டு ஆள்பிடிக்கவில்லை. பெண்களை தந்திரமாய்பிடிக்கவும் இல்லை. மூளை சலவை செய்யும் ஈனமான முயற்சிகளில் இறங்கவுமில்லை. இப்படி எதுவுமே நாம் செய்யவில்லை. உலகமெங்கும் “தனதே உண்மை, மற்றதெல்லாம் வீண்”, என்ற கேடுகெட்ட நம்பிக்கையை கொண்ட இந்த இரு கூட்டங்களும் மனித இனத்திற்கு ஏற்படுத்தியுள்ள இழப்பு கணக்கில் அடங்காது. இழந்த உயிர்கள் எண்ணிக்கையில் அடங்காது.

ஆனால் இந்தியாவில் நம் தர்மத்தை எதிர்த்து இந்த இரு கூட்டங்களும் ஒன்று கூடியுள்ளன. இந்தியாவுக்குள் மட்டுமே இந்த கூட்டனி, இந்திய எல்லைகளை தாண்டினால் இவை இரண்டும் பரம எதிரிகள். இந்த விஷக் கூட்டனியை எதிர்த்து போராடுவது நம் கடமை. சொல்லப்போனால் நமக்கு வேறு வழியே இல்லை. யுத்தம் என்று வந்துவிட்டால் அதில் நம் விருப்பு வெறுப்பு என்று எதுவுமில்லை. தொடங்கியது நாம் அல்ல. வன்முறை நம் வழியும் அல்ல. தர்மமே நம் ஆதாரம். தர்மமே நம் நோக்கம். தர்மமே நம்மை வழி நடத்திச் செல்லும். தர்மத்தை காப்பாற்றுபவனை தர்மம் காக்கும். இது பொய்க்காத வேத சத்தியம்.

அதர்மத்தை எதிர்த்து போராடுவதை விட சிறந்த தர்மம் இல்லை.

நீங்கள் தர்மத்தின் பக்கம் இல்லாது இருந்தால், அதர்மத்தின் பக்கத்தில் இருக்கிறீர்கள்.
யுத்தத்தில் நடுநிலை என்பதே இல்லை.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments: